காஷ்மீரில் சுரங்கப் பாதையில் தீ விபத்து 10 பேர் பலி

Published:

ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் ராம்பன் மாவட்டம் சந்தர்கோடே என்ற இடத்தில் மலையைக் குடைந்து சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. நள்ளிரவிலும் சுரங்கப் பாதை அமைக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை 1 மணி அளவில் திடீரென்று சுரங்கப் பாதையில் தீ விபத்து ஏற்பட்டது. சுரங்கப் பாதைக்குள் செல்லும் மின்சார வயரில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்துக் கொண்டதாகத் தெரியவருகிறது. தீ மளமளவென்று பரவியதால் தொழிலாளர்கள் தப்பிக்க முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

இந்தத் தீவிபத்தில் 10 பேர் கருகி பலியானார்கள். தகவல் அறிந்து, போலீஸார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related articles

Recent articles

spot_img