பிரதமர் மோடிக்கு “உலக நாடக தின” வாழ்த்து : டுவிட்டரில் ராகுல்!

 

rahul tweet image - 2026பிரதமர் மோடிக்கு “உலக நாடக தின” வாழ்த்து என்று தெரிவித்துள்ளார், டுவிட்டரில் ராகுல் காந்தி!

ஒரு முக்கிய அறிவிப்பு என்று கூறி, பாதுகாப்பு துறை தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிவிப்பிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. இந்த அறிவிப்பு குறித்து தாங்கள் தேர்தல் ஆணையத்தை அணுக இருப்பதாகவும் அவை கூறின.

முக்கிய தகவலுடன் நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று காலை அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதனால் நாடெங்கிலும் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில், மோடி என்ன சொல்லப்போகிறாரோ என்ற பரப்ராப்பும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருந்தது.

தாம் 11.45 முதல் 12 மணிக்குள் ஓர் அறிவிப்பு வெளியிடப் போவதாக அவர் கூறியிருந்ததால், பலரும் டிவி., ரேடியோ, டிவிட்டர், பேஸ்புக் என திறந்து வைத்துக் கொண்டு, மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்னர்.

ஆனால் 12 மணி கடந்தும் பிரதமர் மோடியிடம் இருந்து அறிவிப்பு ஏதும் வரவில்லை. இந்நிலையில், தாம் அறிவித்த நேரத்தை விட சற்று தாமதமாக தமது உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி, செயற்கைக் கோள்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைத் தொழில்நுட்பம் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப் பட்டதாக அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த சோதனையை வெற்றிகரமாக செய்த 4வது நாடு இந்தியா. இது பாதுகாப்பு துறையில் நடந்த முக்கிய சோதனை என அறிவித்தார் பிரதமர் மோடி.

இந்நிலையில், மோடியின் உரைக்கு எதிர்க் கட்சிகள் வழக்கம் போல் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தேர்தல் நேரத்தில், இது போன்ற அறிவிப்பு தேர்தல் விதிகளை மீறியதாகும் என குற்றம்சாட்டி உள்ளன. இது தொடர்பாக ரேத்தல் கமிஷனிடம் புகார் அளிக்க உள்ளதாக அவை கூறியுள்ளன.

இருப்பினும், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் அறிவிப்புகள் வெளியிட தேர்தல் ஆணைய அனுமதி தேவையில்லை என தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இருப்பினும், சர்ஜிகல் ஸ்ட்ரைக் விவகாரத்தில், எங்களாலும் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்த இயலும் என்று ராகுல் காந்தி கூறியது போல், இப்போதும் எக்களாலும் சாட்டிலைட்டை சுட முடியும் என்று டிவிட் போடாடதது தான் பாக்கி என்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories