நான் அடிமட்டத்திலிருந்து வந்தவன்… ஸ்டாலினைப் போல் கொல்லைப்புறம் வழியே வந்தவனல்லன்!: எடப்பாடியார் உருக்கம்!

jeyavarthan edappadip - 2026

திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினை மறைமுகமாகக் குறிப்பிட்டு … மற்றவர்களைப் போல் இல்லாமல், அடிமட்டத்தில் இருந்து வந்து முதல்வர் ஆனவன் நான் என்று பிரசாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கந்தன்சாவடியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர்,

‘நாட்டின் முக்கிய பிரச்னைகளைத் தீர்க்கும் நாடாளுமன்றத்தில் உரிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால்தான் தீர்வு கிடைக்கும். திமுக அதைச் செய்யவில்லை. ஆனால் தமிழக மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் முதலில் குரல்கொடுப்பது அதிமுக.,தான்!.

நீங்கள் (ஸ்டாலின்) அரசியலுக்கு வந்த வழி அனைவருக்குமே தெரியும். கஷ்டப்பட்டா நீங்கள் கட்சித் தலைவர் ஆனீர்கள்? கருணாநிதி முதல்வராக இருந்தார். திமுகவின் தலைவராகவும் இருந்தார். அந்தப் போர்வையில் கொல்லைப் புறத்தின் வழியாக பதவிக்கு வந்தவர் நீங்கள். கருணாநிதியின் மகனாக இருந்ததால் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.

கட்சியில் உயர்ந்த பதவிக்கு வருவது என்றால், கிளைச் செயலாளர், ஒன்றிய, மாவட்டப் பொறுப்புகள், மாநிலப் பொறுப்பு என்று படிப்படியாக வர வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு மட்டத்திலும் என்ன பிரச்னை என்பது தலைவராக வரும்போது தெரியும். ஆனால் நீங்கள் அப்படியில்லை.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

ஆக… உங்களுக்கு கட்சியிலும் ஒன்றும் தெரியாது. நாட்டு மக்களைப் பற்றியும் ஒன்றும் தெரியாது.

ஆனால் நான் அப்படியல்ல. கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். 1974-ல் நான் கல்லூரியில் படிக்கும்போதே, கிளைக் கழக செயலாளராக அரசியல் வாழ்க்கையை தொடங்கி படிப்படியாக எம்எல்ஏ, எம்.பி., அமைச்சர் என்று ஆனேன். இப்போது நீங்கள் எல்லாம் சேர்ந்து என்னை முதலமைச்சர் ஆக்கியிருக்கிறீர்கள். உழைப்பால் வந்தவன் நான். அதுதான் நிலைத்திருக்கும்” என்று உருக்கமாகப் பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அவரது பேச்சை பலரும் இப்போது சமூகத் தளங்களில் பகிர்ந்து, எடப்பாடிக்கு ஆதரவாக கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

அவற்றில் ஒரு கருத்து.. இது!

#எடப்பாடியார் ???? ராக்ஸ் …. நான் கூட்டமில்லாத இடத்தில் கையெடுத்து கும்பிடுவதாக ஸ்டாலின் கேலி பேசுகிறார். உச்சி வெயிலில் இங்கிருக்கும் கூட்டம் ஸ்டாலின் கண்ணுக்கு தெரிவதில்லை.

முதலில் நான் ஒரு தொண்டன்.பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் நடந்து வரும் போது தொலைதூரத்தில் இருந்து வணங்கிக் கொண்டிருந்த தொண்டன்.இன்று படிப்படியாக உயர்ந்து முதலமைச்சராகியுள்ளேன்.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

ஒரே ஒருவர் சாலையோரத்தில் நின்றாலும் நான் எழுந்து கும்பிடுவேன்.அவர்களின் அன்பு என்னவென்று எனக்குத் தெரியும்.ஸ்டாலினுக்கு அது தெரியாது காரணம் அவர் வாழ்ந்த வாழ்வு அப்படிப்பட்டது. அவருக்கு மக்களை பற்றி எந்த கவலையும் இல்லை,முதல்வர் நாற்காலி மட்டும்தான் குறி.

நான் விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். மக்களுக்கு என்ன மரியாதை தர வேண்டும் என்பது எனக்குத் தெரியும். எத்தனை பத்திரிக்கையில் படமெடுத்து போட்டாலும் சரி,யார் கேலி பேசினாலும்  சரி, ஒரே ஒருவர் நின்று வணக்கம் சொன்னாலும் அவரை மதித்து நான் வணக்கம் சொல்லித்தான் வருவேன் அது தமிழர் பண்பாடு.  –  முதல்வர் #எடப்பாடி_பழனிச்சாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories