இலங்கைப் படையினரின் அத்துமீறலை தடுக்க அவசர நடவடிக்கை தேவை: ராமதாஸ்

சென்னை:
மீனவர்கள் கைது விவகாரத்தில் இலங்கைப் படையினரின் அத்துமீறலை தடுக்க அவசர நடவடிக்கை தேவை என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

வங்கக் கடலில் மீன் பிடிப்பதற்காக சென்ற நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் 29 பேரை சிங்களக் கடற்படையினர் சட்டவிரோதமாக சிறை பிடித்துச் சென்றிருக்கின்றனர். பன்னாட்டு கடல் விதிகள் மற்றும் பாரம்பரிய நடைமுறைகளுக்கு எதிராக தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் நடத்தி வரும் தாக்குதல்களும், சிறை பிடிப்பு நடவடிக்கைகளும் கடுமையாக கண்டிக்கத்தக்கவையாகும்.

நாகை மாவட்டம் அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்நாள் மாலை வங்கக் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். கோடியக்கரைப் பகுதியில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டு இருந்த போது அங்கு வந்த சிங்களப் படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த 29 மீனவர்களை அவர்களின் படகுகளுடன் சிறை பிடித்துச் சென்றனர். இலங்கை திரிகோணமலை பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கூறி அவர்களை நீதிமன்றத்தில் சிங்களப்படையினர் நேர்நிறுத்தி சிறையில் அடைத்திருக்கின்றனர். உண்மையில் தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் தான் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். ஆனால், அத்துமீறி நுழைந்து மீனவர்களை கைது செய்ததுடன், அவர்கள் தான் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக சிங்களப்படை அபாண்டமாக பழி சுமத்தியுள்ளது. அண்மைக்காலமாகவே இந்திய எல்லைக்குள் சிங்களப் படை அத்துமீறி நுழைந்து மீனவர்களை கைது செய்வது அதிகரித்திருக்கிறது.

கடந்த இரு மாதங்களில் மட்டும் 47 தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்துள்ளது. அதுமட்டுமின்றி தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 57 படகுகளை பறிமுதல் செய்து வைத்துள்ள இலங்கை அரசு அவற்றை திருப்பித் தர மறுத்து வருகிறது. தவறு எதுவும் செய்யாத போது தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு சிறையில் அடைத்து வைக்கப்படுவதும் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் ஆகும். தமிழத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு எதிராக இத்தகைய அட்டூழியங்கள் தொடர அனுமதிப்பது மிக ஆபத்தானது.

மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம் அதை வேடிக்கைப் பார்ப்பதையும், மீனவர்களுக்கு ஆதரவாக பெரிய அளவில் போராட்டங்கள் வெடிக்கும் போது இலங்கை அரசுடன் பேசி அவர்களை விடுதலை செய்ய வைப்பதையும் மத்திய அரசு வாடிக்கையாக வைத்துக் கொண்டிருக்கிறது. இது சரியான அணுகுமுறை அல்ல. உடலில் கட்டி வளரும் வரை பொறுத்துக் கொண்டிருந்து விட்டு, வளர்ந்த பின் அதனால் ஏற்படும் வலிக்கு மருந்து போடுவதை விட, கட்டியே வளராமல் தடுப்பது தான் சிறந்த அணுகுமுறையாகும். அதேபோல், தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் ஆன பிறகு அவர்களை மீட்க நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவர்கள் கைது செய்யப்படாமல் தடுப்பது தான் சிறப்பானதாக இருக்கும். அதைத் தான் மத்திய அரசு உடனடியாக செய்ய வேண்டும்.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகவே இருந்தாலும் அவர்களை கைது செய்ய இலங்கை அரசுக்கு அதிகாரம் இல்லை. ஏனெனில், இரு நாடுகளுக்கு இடையே கடல் எல்லை மிகவும் குறுகியதாக இருக்கும் போது, ஒரு நாட்டைச் சேர்ந்த மீனவர் இன்னொரு நாட்டின் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடிப்பது சட்டப்பூர்வமான உரிமையாகும். இதை பன்னாட்டு நீதிமன்றத் தீர்ப்புகள் பல்வேறு தருணங்களில் உறுதி செய்திருக்கின்றன. அவ்வாறு இருக்கும் போது எல்லை தாண்டினார்கள் என்ற குற்றச்சாற்றின் அடிப்படையில் தமிழக மீனவர்களை இலங்கை கைது செய்வது முறையல்ல.

இனிவரும் காலங்களில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க, பன்னாட்டு சட்டங்களின்படி வங்கக்கடல் பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை உறுதி செய்வதற்கான ஒப்பந்தத்தை இலங்கை – இந்திய அரசுகள் செய்து கொள்ளவேண்டும். அதற்கு முன்பாக இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் 76 பேரையும், மீனவர்களுக்கு சொந்தமான 61 படகுகளையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Entertainment News

Popular Categories