காஞ்சிபுரத்தில் காவேரி பிரச்சினை குறித்து உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் பேட்டி .
காவேரி பிரச்சினையில் பிரதமர் மோடி உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று காவேரி மேலாண்மை அமைக்க வேண்டும்.
பிரதமர் மோடி காவிரி பிரச்சினை குறித்து இரு மாநிலத்தின் முதலமைச்சர்களை கூப்பிட்டு பேச்சு வார்த்தை நடத்த முன்வந்திருப்பது மிகவும் கண்டிக்கதக்கது.மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாகும்.எனவே இந்த போக்கை பிரதமர் கைவிடவேண்டும்.
♈????????????இராயபுரம் 48-வது வட்டத்தில் சிதிலமடைந்த சிறுவர் பூங்காவை புதுப்பித்து அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று திறந்து வைத்தார்
———————————–
மாண்புமிகு தமிழக முதலமைச்சர்
ஜெயலலிதா அவர்களின் ஆணைக்கிணங்க இராயபுரம் தொகுதி 48-வது வட்டம் பார்த்தசாரதி நகரில் உள்ள சிறுவர் விளையாட்டு பூங்கா, நடைபயிற்சி வளாகம், சமுதாய கூடம் ஆகியவை பல ஆண்டுகளாக சிதிலமடைந்த டைந்த நிலையில் இருந்தது தற்போது அதை புதுப்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சர் டி.ஜெயக்குமார், அவரின் திருக்கரங்கங்களால் இன்று திறந்து வைத்தார் இதில் பகுதி செயலாளர் சி பி இராமஜெயம், மாமன்ற உறுப்பினர்கள் ஆர். பூங்கொடி, என் வி. ரவி, மற்றும்
டி. கந்தன், நா.ப.சாரதி மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ் எஸ் கே. கோபால், வட்ட செயலாளர் எஸ் ஆர். இராஜசேகர்,மற்றும் பா.சங்கர் உடன் மாவட்ட பகுதி வட்ட பிற அணி நிர்வாகிகள் பலர் இருந்தனர்
♈????????????வடசென்னை பத்திரிக்கையாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் இன்று
மருது கணேஷ், மற்றும் பாக்யா ஆகியோரது தலைமையில் வண்ணாரப்பேட்டையில் உள்ள மன்றத்தில் நடைபெற்றது இதில் அனைவரும் ஒன்றினைத்து சங்க செயல்பாடு மற்றும் அடுத்தடுத்து கட்ட பணிகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது நிகழ்ச்சியில் நிருபர்கள் பலர் கலந்து கொண்டனர்
♈????????????chennai-ஆர் கே.நகர் திமுக கிழக்கு பகுதி கழகத்தின் சார்பில் 42-வட்டம்
174 – பாகத்தில் உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் தகுதியுள்ள அனைத்து பொதுமக்களும் இடம் பெற ஏதுவாக 18 – வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களை சேர்த்தல், மற்றும் பெயர் நீக்கம் தொடர்பாக படிவங்களை பகுதி செயலாளர் என். மருது கணேஷ், தலைமையில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி இன்று நடைபெற்றது இதில் சிம்லா முத்துசோழன்,
எம் எம். சாமி, மற்றும் திமுகவினர் பலர் உடன் இருந்தனர்
♈????????????புதுக்கோட்டையில் சக வார, மாத இதழ் செய்தியாளர்களை அநாகரீகமாக சண்டை போடும் வெத்து வேட்டு மாலை நாளிதழ் நிருபர்… தீபாவளி வசூலுக்கு இப்பவே செய்தியாளர்கள் பட்டியல் தயார் செய்ய சொல்லி சங்க தலைவரை கட்டாயம் செய்யும் இந்த நிருபர்… கட்சி நிகழ்ச்சிக்கு சென்று இவர் தனியாக ஓரு கவர்… இவரது புகைப்பட கலைஞரை அனுப்பி அவரை இரண்டு கவர் வாங்குவது ஆக நாளிதழ் ஓன்றுதான் கவர் மூன்று…. இவர் நேர்மையான முறையில் செயல்படும் புலனாய்வு மாத வார இதழ் நிருபர்களை கொச்சைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது….
♈????????????வினாயகர் சதூர்த்தியை யொட்டி சென்னை இராயபுரம் தொகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் சமபந்தி விருந்து வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் டி.ஜெயக்குமார், கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கினார். இதில் பகுதி செயலாளர் சி பி இராமஜெயம், காவல் உதவி ஆணையர் ஆனந்த் குமார், பூங்கொடி எம் சி, என் வி. இரவி எம் சி, சந்திரமதிசேகர், டி. கந்தன், நா.ப.சாரதி, மற்றும் வட்ட கழக செயளாளர்கள் மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ் எஸ் கே கோபால், பா. சங்கர், மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்
1] *சிரியாவில் திட்டமிடப்பட்டுள்ள போர்நிறுத்தத்திற்கு முன்னதாக, போரிடும் பல தரப்பினரும் தங்களுடைய நிலைகளை பலப்படுத்தி கொள்வதற்காக, சிரியாவின் இட்லிப் மற்றும் அலெப்போ நகரங்களில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதல்களில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
2] *செஷெல்ஸ் தீவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு தசாப்த காலங்களில் முதல் முறையாக எதிர்க்கட்சி வெற்றி பெற்றிருக்கிறது
3] சிட்னியில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தியதாக ஒருவர் கைது -சிட்னியின் தென் மேற்கு பகுதியில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தியதாகவும், கொலை செய்ய முயற்சித்ததாவும் 22 வயதான ஒருவர் மீது ஆஸ்திரேலிய காவல் துறையினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.இந்த நபர் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரால் தூண்டப்பட்டவர் என்று அவர்கள் கூறுகின்றனர்
4] ஹஜ் போதனையிலிருந்து விலகும் செளதியின் மூத்த மதகுரு: கமேனியின் சாடல் காரணமா? -சௌதி அரேபியாவின் முன்னிலை மதகுரு, 35 ஆண்டுகளில் முதல்முறையாக, இந்த ஆண்டு பாரம்பரிய ஹஜ் போதனை வழங்கப் போவதில்லை என்று அறிக்கைகள் தெரிவிகின்றன. `இரானியர்கள் முஸ்லிம்கள் அல்ல’ என்று அவர் வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து இந்தத் தகவல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.சௌதி அரேபியாவின் ஹஜ் பயண மேலாண்மையை இரானின் உயரிய மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனி இழிவாகப் பேசியதைத் தொடர்ந்து இந்தக் கூற்று வெளிப்பட்டது.
5] வட கொரியா அணுகுண்டு சோதனை: தண்டனையை ஆராய்கிறது அமெரிக்கா -மிகவும் சமீபத்தில் வட கொரியா நடத்திய அணுகுண்டு சோதனைக்கு தண்டனை அளிக்கும் விதமாக தன்னிச்சையான செயல்பாடுகளை முன்னெடுக்க அமெரிக்கா ஆலோசித்து வருவதாக வட கொரியாவுக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதர் தெரிவித்திருக்கிறார்
6] ஸ்ரீநகர்,பாதுகாப்பு படையினர் இரவு நேரங்களில் ரெய்டு நடத்துவதாக குற்றம் சாட்டி ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது மோதல் ஏற்பட்டதில் 50 பேர் காயம் அடைந்து உள்ளனர்
7] மல்லையா பிஎம்எல்ஏ வழக்கு; அமலாக்கப்பிரிவு மூன்றாவது முறையாக சொத்துக்களை பறிமுதல் செய்கிறது
8] ஜம்மு-காஷ்மீரில் எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்
9] உ.பி.யில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற பா.ஜனதாவின் கனவு நிறைவேறாது நிதிஷ் குமார்
10] தான்சானியா நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழப்பு, 200 பேர் காயம்
11] வங்காள தேசத்தில் பயங்கரம் ஆலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து; 25 பேர் கருகி சாவு
12] லக்னோ: இந்திய கிரிக்கெட் அணியின் வேகபந்து வீச்சாளர் பிரவீண் குமார் சமாஜ்வாதி கட்சியின் இணைந்தார். முதல்வர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் இணைந்தார்
13] குஜராத் மாநிலம் சூரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது
14] சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பயிர்கள் சேதமடைந்தன. மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
15] சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் முடிச்சூர், வரதராஜபுரத்தைச் சேர்ந்த மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பருவமழை முன்னதாக அடையாற்றை தூர்வார பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தூர் வாரி அடையாறு கரைகளை பலப்படுத்தவும் முடிச்சூர், வரதராஜபுரம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
16] திருத்தணி அருகே டெங்கு காய்ச்சலுக்கு 3 வயது சிறுமி மன்விதா உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மன்விதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்
17] ஐதராபாத்தில் துணிகடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கடை முழுவதும் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்*
18] மேற்கு வங்கம் மாநிலம் சிலிகுரியில் மின்கம்பி அறுந்து விழுந்து 2 யானைகள் உயிரிழந்தன. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். யானை உயிரிழந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து யானைகள் உயிரிழந்து வருவது குறிப்பிடத்தக்கது
19] கும்பகோணத்தில் முகமது இக்பால் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. துக்க நிகழ்ச்சிக்காக முகமது இக்பால் வெளியூர் சென்றிருந்தபோது மர்மநபர்கள் கைவரிசைக் காட்டியுள்ளனர்
20] காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ் ஒருவர் உயிரிழந்தார். கட்டிடம் ஒன்றில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை பிடிக்க கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது
21] ராமநாதாபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர். கடுகுசந்தை அருகே நின்றிருந்த போலீஸ் வாகனம் மீது மினிவேன் மோதியது. இந்த விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர்
22] சென்னை திருவல்லிக்கேணியில் விநாயகர் ஊர்வலம்
23] கோவில்பட்டி அருகே லாரி மீது டிப்பர் லாரி மோதல் – ஒருவர் பலி -2பேர் காயம்
24] ஜீ.வி.பிரகாஷ், சரத்குமார் இணையும் அடங்காதே ….ஜீ.வி.பிரகாஷ் காட்டில் மழைவிட்டபாடில்லை. அரை டஜன் படங்கள் கைவசம் வைத்திருப்பவர், புதிதாக மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்
25] அஜித் தலைமையில் நடக்கவிருக்கும் அப்புக்குட்டியின் திருமணம் -அஜித் நடித்த வேதாளம், வீரம் மற்றும் தற்போது ’தல 57’ என்கிற படத்திலும் நடித்து வருபவர் சிவபாலன் என்கின்ற அப்புக்குட்டி. சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக அஜித் சிவபாலனை வைத்து போட்டோ சூட் ஒன்றையும் நடத்தினார் என்பது குறிப்பிடதக்கது. அப்புக்குட்டியின் உண்மையான பெயரான சிவபாலனையே பயன்படுத்துமாறும் அவருக்கு அறிவுரை கூறியுள்ளார் அஜித்.இந்நிலையில், சென்னையில் உள்ள வளசரவாக்கத்தில் புதிய வீடு கட்டி வரும் அவருக்கு ஊரில் பெண் பார்த்துள்ளார்களாம். அதனை அஜித்தின் தலைமையில் நடக்க வேண்டும் என கேட்டு கொண்டராம் அப்புக்குட்டி. அதற்கு அஜித்தும் சம்மதம் தெரிவித்துள்ளாராம். விரைவில் அஜித் தலைமையில் சிபாலனுக்கு திருமணம் நடக்க போவதாக கோலிவுட் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
26] சூடான அஸ்வின்; தவித்த நடுவர்கள் –
தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியில் திண்டுக்கல்-சேப்பாக்கம் ஆகிய அணிகள் இடையே நடந்த போட்டியில் சர்வதேச கிரிக்கெட் வீரர் அஸ்வின்களத்தில் கோபம் அடைந்ததால் நடுவர்கள் செய்வதறியாது திகைத்தனர். கடந்த வெள்ளிக்கிழமை நடைப்பெற்ற போட்டியில் திண்டுக்கல் அணியும் சேப்பாக்கம் அணியும் மோதியது. சர்வதேச கிரிக்கெட் வீரர் அஸ்வின் சேப்பாக்கம் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் அணியின் பந்து வீச்சாளர் சாய் கிஷோர் பந்தில் சேப்பாக்கம் அணியின் வீரர் ஜெகதீசன் அவுட்டாக, சாய் கிஷோர் அவரிடம் வம்பிழுக்க, களத்தில் அஸ்வின் கோபமடைந்து கிஷோரிடம் மோதலுக்கு தாயாராகி விட்டார். திண்டுக்கல் அணியின் மற்ற வீரர்கள் அஸ்வினை சமாதானம் செய்தனர். நடுவர்கள் என்ன செய்வது தெரிமால் திகைத்துபோய் நின்றனர்.
26] குத்துச்சண்டை போட்டியில் மனிதரோடு மோதும் கங்காரு : கலக்கல் வீடியோ -குத்துச்சண்டை போட்டியில் மனிதரோடு, ஒரு கங்காரு மோதும் அசத்தல் வீடியோ சமூகவலைத்தளங்களில் வலம் வருகிறது
27] சாம்சங் கேலக்ஸி நோட் 7 உரிமையாளர்கள் பேட்டரி வெடிப்பின் காரணமாக அதனை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என ஐக்கிய அமெரிக்க நாடுகளின் நுகர்வோர் தயாரிப்பு பாதுகாப்பு ஆணையம் எச்சரித்துள்ளது
28] மத்திய ராணுவ அமைச்சர் மனோகர் பரிக்கர் கூறிய கருத்திற்கு எதிர்கருத்து கூறியதால், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பியான நடிகை ரம்யா மீது ஏற்கனவே ஒரு தேசத் துரோக வழக்கு நடைபெற்று வருகிறது -இந்நிலையில், அவர், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, ”சுதந்திரப் போராட்டத்தின் போது, ஆர்எஸ்எஸ் அமைப்பினர், ஆங்கிலேயர்களுடன் கூட்டு வைத்திருந்தார்கள்” என்றார்.இதையடுத்து, அவர் மீது வழக்கறிஞர் வசந்த் மரகடா என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், புகாரை ஏற்கப்படவில்லை. இதனால், அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகை ரம்யா மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்
29] காக்கா முட்டை மணிகண்டனின் அடுத்த வெளியீடு ஆண்டவன் கட்டளை. பாஸ்போர்ட் பிரச்சனையை மையப்படுத்திய இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ரித்திகா சிங் நடித்துள்ளனர்
30] செப்டம்பர் 13ஆம் தேதி பக்ரித் பண்டிகையை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 144 தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அம்மாநில அரசை கேட்டுக்கொண்டுள்ளது
♈????????????திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பில் முக்கியத்துவம்!
சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார் தமிழ்நாடு சமூக நலத் துறை அமைச்சர் சரோஜா.
தமிழ்நாட்டில் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
4000க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
♈????????????இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில்
எஸ் பி ஜெயச்சந்திரன் தலைமையில் .
2 ஏடிஎஸ் பி
12 எஸ் பி மற்றும் காஞ்சிபுரம், விழுப்புரம், திருப்பூர், திருவண்ணாமலை, சேலம், கடலுர் ஆகிய 6 மாவட்டல்களை சேர்ந்த 750 போலிசார் உட்பட 2 ஆயிரம் பேர் 340 இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் 16 இடங்களில் வீடியோ கேமராவுடன் கூடிய செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளன மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள் அடைப்பு
vishwarubam9962023699