அதிமுக முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தனது ஆதவாளர்களுடன் சென்று ஓபிஎஸ் அணியில்
இணைந்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி,
தனது ஆதவாளர்கள் 300 பேருடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில்
சந்தித்து அவரது அணியில் இணைந்தார்.
இவர் 2011-2016 ஆண்டில் திருச்சி மேற்கு தொகுதியில் இருந்து தேர்வு
செய்யப்பட்டு, அறநிலையம், சட்டம், நீதித்துறை அமைச்சராக பணியாற்றியவர். 2006
ஆண்டு முதல் 2011 ம் ஆண்டு வரை ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏவாக இருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.