மாதிரி கிராமசபை நடத்தி டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம்

Published:

TPN TASMAK - 2026

தென்காசி அருகேயுள்ள திப்பணம்பட்டியில் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி 9வது
நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் மாதிரி கிராமசபை
கூட்டம் நடத்தினர்.அண்மையில்திப்பணம்பட்டி கிராமசபை கூட்டத்தில் டாஸ்மாக்
கடையை அகற்றக்கோரி இயற்றிய தீர்மானத்தில் சிலர் திருத்தும் செய்ய சிலர்
உடன்தையாக இருந்தாக பொதுமக்கள் குற்றம்சாற்றி வருகின்றனர் அதை நினைவு
படுத்தும் வகையில் இந்தப்போரரட்டம் நடைபெற்றது
திப்பணம்பட்டியில் பிராதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடையை
நிரந்தரமாக மூடக்கோரி திப்பணம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த
பொதுமக்கள் கடந்த 1ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுக்கடை அருகில் பந்தல் அமைத்து சமையல் செய்து சாப்பிட்டு வரும் பொதுமக்கள்
தினந்தோறும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
போராட்டத்தின் 8வது நாளான நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்
பொதுமக்கள் வாயில் கறுப்பு துணி கட்டி மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
போராட்டத்தின் 9வது நாளான நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள்
மாதிரி கிராம சபை கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் அதிகாரிகள் தங்களது
அதிகாரத்தை எவ்வாறு தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதை நடித்து காட்டினர்.
ஏற்கனவே பொதுமக்கள் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் திருத்தப்பட்டதாக
கலெக்டரிடம் புகார் தெரிவித்த நிலையில் போராட்டக்காரர்கள் தீர்மானத்தை
திருத்திய அதிகாரிகளை கண்டிக்கும் வகையில் மாதிரி கிராம சபை கூட்டம் நடத்தி
நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img