வாஞ்சி நினைவு நாள்; அந்தணர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மரியாதை!

andhanar munnetrak kazhagam - 2026
#image_title

அந்தணர் முன்னேற்றக் கழகம் சார்பில் வீரன் வாஞ்சிநாதன் நினைவு நாளில், செங்கோட்டையில் உள்ள வீரவாஞ்சி சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

ஆங்கிலேயர்களுக்கு எதிரான நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியமான நிகழ்வாக வராலாற்றில் பதிவாகியுள்ள திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆஷ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், தன் இன்னுயிரைத் தியாகம் செய்த வீரன் வாஞ்சிநாதனின் பிறந்த ஊரான செங்கோட்டையில், வாஞ்சிநாதனது தியாகத்தைப் போற்றும் வகையில் வெண்கலச் சிலையும் மணிமண்டபமும் கட்டப்பட்டுள்ளது.

வஞ்சி உயிர்த்தியாகம் செய்த நாளான ஜூன் 17ம் தேதி இன்று செங்கோட்டை பேருந்து நிலையம் முன்னுள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு பல்வேறு அமைப்பினரும் தனிநபர்களும் அரசியல் கட்சிகளும் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.

அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் இன்று காலை வாஞ்சி மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதே நேரம் பேருந்து நிலையம் முன்னுள்ள வாஞ்சி வெண்கலச் சிலைக்கு, செங்கோட்டை பிராமண சமூகத்தினர், வாஞ்சி உயிர்த் தியாகம் செய்த காலை 10.41க்கு மாலை அணிவித்தனர். தொடர்ந்து திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பிராமண சங்கத்தினர், தென்காசி, கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக., பாஜக., கட்சி நிர்வாகிகள் என பலரும் மாலை அணிவித்தனர்.

தொடர்ந்து வாஞ்சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சியில், தமிழ்நாடு முழுவதும் இருந்து அந்தணர் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அந்தணர் முன்னேற்றக் கழகத்தின் தொண்டரணி மாநில செயலாளர் முத்துராமன், மாநில செயலாளர் சுரேஷ் சிவம், மாநில துணைத் தலைவர் முத்து சிவம், தூத்துக்குடி மாவட்டத் தலைவர் கணபதி, தென்காசி மாவட்டத்தின் சார்பில் கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாஞ்சிநாத ஐயர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

Topics

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories