![குற்றாலம் ஸ்ரீ பராசக்தி கல்லூரி மாணவிகளுக்கு இலக்கமுறை கல்வியறிவு பயிற்சி! 1 courtallam collegemeeting](https://dhinasari.com/wp-content/uploads/2024/05/courtallam-collegemeeting-1024x576.jpg)
குற்றாலம், ஶ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி,மகளிர் பயில்வு மையம் மற்றும் தென்காசி மாவட்ட சமுகநலத்துறை பெண்கள் அதிகாரம் அளிக்கும் மையம் ஆகியவை இணைந்து இலக்கமுறை கல்வியறிவு பயிற்சி பராசக்தி கல்லூரியில் நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் நாகேஸ்வரி தலைமை தாங்கினார். விஜிலா நேசமணி அனைவரையும் வரவேற்று பேசினார். இலக்கமுறை கல்வியறிவு பயிற்சியாளர் உதயாவேனி தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த பயிற்சி அளித்தார்.
மகளிருக்கான ஒரு நிறுத்த மைய வழக்கு பணியாளர் முருகேஸ்வரி மகளிருக்கான அவசர உதவி அமைப்பு மற்றும் பாதுகாப்பாக தொழில்நுட்ப வளர்ச்சியின் பயன்பாட்டினை நுகர்வது குறித்து எடுத்துரைத்தார்.
நிதி கல்வியறிவு நிபுணர் சுபாஷினி மகளிர் தன்னிறைவுடன் இருக்கவேண்டும், கண்டிப்பாக உயர்கல்வி ஒவ்வொரு மகளிரும் பெறவேண்டும் என்பது குறித்து உரையாற்றினார். முடிவில் இளங்கலை மூன்றாமாண்டு விலங்கியல் துறை மாணவி சிவசத்யா நன்றி கூறினார்.