சீனப் பொருள்களைப் புறக்கணிப்போம்: உறுதிமொழி ஏற்க இந்து முன்னணி அழைப்பு!

rama gopalan
இந்து முன்னணி அலுவலகத்தில்… தேசத்துக்காக உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு இந்துமுன்னணி நிறுவனர் ராம.கோபாலன் உள்ளிட்டோர் அஞ்சலி!

நயவஞ்சக சீன கம்யூனிச அரசின் தாக்குதலில் நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். சீனப் பொருட்களைப் புறக்கணிக்க உறுதிமொழி ஏற்போம் என்று இந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

இந்து முன்னணியின் சார்பில் அதன் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில்…

உலகத்தையே கபளீகரம் செய்யத் துடிக்கும் நாடு சீனா. திபெத்தை, ஹாங்காங்கை தற்போது விழுங்கி விட்டது. நேபாளத்தை கபளீகரம் செய்ய, மறைமுகமான கம்யூனிச ஆட்சியை ஏற்படுத்தி உள்ளது.

1962ல் நேருவை ஏமாற்றி, நேரு – சூஎன்லாய் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மை காயும் முன் இந்தியா மீது படையெடுத்து பல சதுர கிலோமீட்டர் இந்தியப் பகுதிகளை பிடித்து தன்வசமாக்கி முதுகில் குத்தியது.

கரோனா வைரஸை உருவாக்கி உலகமெங்கும் பரப்பி லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்துள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாத நாடாக இருப்பதற்கும் பாகிஸ்தான் இந்தியாவில் பயங்கரவாத செயல்களை செய்வதற்கும் முக்கிய காரணம் சீனாவின் ஆதரவும், சீனா ஆயுதம் வழங்குவதும் தான். கம்யூனிஸ்டுகள் மூலம் இந்தியாவை கபளீகரம் செய்ய திட்டமிட்டு சதி செயல்களை நீண்டகாலம் செய்து வருகிறது.

தற்போது உலகின் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும்கூட இந்தியாவோடு சமாதானம் பேசிக் கொண்டே இந்திய வீரர்களைக் கொன்றுள்ளது. இந்திய மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் தேசபக்தியை வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது.

சீனப் பொருட்களை இலவசமாகக் கொடுத்தால்கூட வாங்கக் கூடாது என்ற உறுதிப்பாட்டை இந்திய மக்கள் ஒவ்வொருவரும் எடுக்க வேண்டிய தருணம் இது. சீனாவை எதிர்த்து கண்டன குரல் தமிழகம் முழுவதும் எழுப்புவோம். கிளைகள் தோறும் கண்டன நிகழ்ச்சி நடத்தி சீனப் பொருட்களைப் புறக்கணிக்க உறுதிமொழி எடுப்போம்.

இந்திய நாட்டிற்காக இன்னுயிர் தந்து வீரமரணமடைந்த நம் வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவோம்… என்று கோரியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories