அட்வைஸ் செய்ததால் அத்தையை வெட்டிய மருமகன்!

Screenshot_2020_0810_120617

நாமக்கல்லின் புதுச்சத்திரம் அருகே பாலப்பாளையத்தை சேர்ந்த தம்பதி பெருமாள்- அஞ்சலை. இவர்களது மகன் கோடீஸ்வரன் (வயது 30), ஆசிரியராக வேண்டும் என்ற ஆசையில் எம்எஸ்சி பிஎட் படித்துள்ளார்.

ஆனால் அரசு ஆசிரியர் பணிக்காக பலமுறை முயற்சித்தும் வேலை கிடைக்கவில்லை, இதனால் விரக்தியில் இருந்த கோடீஸ்வரனுக்கு நாமக்கலை சேர்ந்த நபர் ஒருவர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

இதனை நம்பி அவரிடம் சுமார் 12 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளார், சொன்னபடி வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி அளிக்காமலும் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் கோடீஸ்வரனிடம் பணம் கொடுத்த நபர்கள், பணத்தைத் திரும்பக் கேட்டு, நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்திருந்தனர்.

இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கோடீஸ்வரன், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கோடீஸ்வரன் வீட்டுக்குச்சென்று, நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகும்படி கூறினர்.

அப்போது இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோடீஸ்வரன், காவலர்களை தாக்க முயற்சித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை, அவரை கைது செய்து, சிறையில் அடைத்தது. பின்னர் பிணையில் வெளியே வந்த அவர், தொடர்ந்து யாரிடமும் பேசாமல் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகச் சொல்கிறார்கள்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பக்கத்து வீட்டில் வசித்த அத்தையை திடீரென சரமாரியாக வெட்டிக் கொன்றதுடன், பெரியப்பாவையும், அந்த வழியாக வந்த நரேஷ் குமார் என்பவரையும் அரிவாளால் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெரியப்பா, நரேஷ்குமாரை மருத்துவமனையில் சேர்த்த அக்கம்பக்கத்தினர் போலிசாருக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலிஸ் அதிகாரிகள் வீட்டுக்குள் பதுங்கி இருந்த கோடீஸ்வரனை கைது செய்தனர்.

போலிசிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், வேலை வாங்கி தருவதாக நபர் ஒருவரிடம் நான் ஏமாந்ததை அறிந்து கொண்ட என் அத்தை அடிக்கடி அறிவுரை கூறி வந்தார். அது எனக்கு பிடிக்காததால் அவரை வெட்டிக் கொன்றேன், பக்கத்தில் இருந்த பெரியப்பாவும், நரேஷ்குமாரும் என்னை பிடிக்க வருகிறார்கள் என நினைத்து அவர்களையும் தாக்கினேன் என தெரிவித்துள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories