செல்போனை பறித்து சென்றவர்களை கடுமையாக தாக்கி பைக்கில் இருந்து கீழே தள்ளியுள்ளார் 15 வயது சிறுமி ஒருவர்.
ஒரு துணிச்சலான செயலில், 15 வயது சிறுமி பைக்கில் இருந்த இருவரில் ஒருவரிடம் கடுமையாக சண்டையிட்டார். அவர் அந்த சிறுமியின் தொலைபேசியைப் பறித்ததாகவும், கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பஞ்சாபின் ஜலந்தர் பகுதியில் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது, இந்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகிவிட்டன, மேலும் அந்த பெண் காட்டிய வலிமை மற்றும் தைரியம் குறித்து மக்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.
ஃபிதேபுரி மொஹல்லாவில் வசிக்கும் குசும்குமாரி என்ற 15 வயது சிறுமி, தனது வீட்டிற்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது, ஒரு பைக்கில் இரண்டு பேர் அவளைப் பின்தொடர்ந்து வந்து, அவரது தொலைபேசியைப் பறிக்க முயன்றுள்ளனர்.
ஆனால், அந்த பெண் முயற்சியை தடுத்து அந்த இளைஞரை பைக்கை விட்டு கீழே தள்ளுகிறார். அப்போது, அந்த இளைஞர் இந்த பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளார். எனினும், அந்த பெண் விடாமல் அந்த இளைஞரைத் துரத்திப் பிடித்தது மட்டுமல்லாமல், அக்கம் பக்கத்தில் இருப்பவர்களையும் அழைத்து அந்த இளைஞரை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதனை அடுத்து, சிறுமி ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் இழுத்துச் செல்லப்பட்ட குற்றவாளி 22 வயதான அவினாஷ் குமார், பேகம்புரா, பஸ்தி டேனிஷ்மண்டாவில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார், அப்பகுதியினர் அளித்த புகாரின் அடிப்படையில், அவினாஷ் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவினாஷின் கூட்டாளி இன்னும் தலைமறைவாக உள்ளார், அவருக்கு எதிராக ஐபிசியின் 389 பி மற்றும் 307 (கொலை முயற்சி) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
This brave pb teenage girl didn't allow her mobile snatchers escape at Jalandhar & pinned one of them down fighting bravely till d others came to help.Snatcher attacked her with sharp weapon but she persisted.Salute to her who deserves big honour.@PMOIndia @SonuSood @ravishndtv pic.twitter.com/VpcMIzPnCW
— Sarbjit Dhaliwal (@SarbDhaliwal48) September 1, 2020