spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாஜாக்கிரதை பெற்றோர்களே! செல்போனை சார்ஜ் போட்டபடியே பயன்படுத்திய சிறுமி! வெடித்து உயிரிழப்பு!

ஜாக்கிரதை பெற்றோர்களே! செல்போனை சார்ஜ் போட்டபடியே பயன்படுத்திய சிறுமி! வெடித்து உயிரிழப்பு!

- Advertisement -

ஆன்லைன் வகுப்புக்காக செல்போனை சார்ஜ் போட்டபடி பயன்படுத்திய 17 வயது பள்ளி மாணவி, செல்போன் வெடித்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. இடையிடையே நோய்த்தொற்று பரவல் குறையும் போது, ஒரு சில மாதங்கள் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடந்தது.

இருந்த போதிலும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்த காரணத்தினால், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு, ஆன்லைன் மூலமாக மாணவர்கள் கல்வி கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், குஜராத் மாநிலம் மெஹ்சனா கிராமத்தை சேர்ந்தவர் சாரதா தேசாய்.

இவர் கொரோனா நோய்த்தொற்று ஊரடங்கு காரணமாக தனது பள்ளி வகுப்பை ஆன்லைன் மூலம் படித்து வருகிறார். அப்போது செல்போனை சார்ஜ் போட்டபடி அவர் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

செல்போன் வெகுநேரம் பயன்படுத்தியதாலும், செல்போனை சார்ஜ் போட்டுக்கொண்டு பயன்படுத்தியதாலும் அந்த போன் திடீரென வெடித்ததாக தெரிகிறது.

இதனால் அந்த மாணவி படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe