ஏடிஎம்.,க்கு வித்திட்ட நம் கணிதமேதை வாழ்வில்..!

mathematics day - 2026

இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ATM க்கு காரணமான ஸ்ரீநிவாசனுக்கு பிறந்த நாள்.

ஆம் உலகம் போற்றும் #கணிதமேதைராமானுஜத்தின் பிறந்த நாள் இன்று.ஸ்ரீநிவாச ராமானுஜம் என்பதே முழு பெயர்.

நாமகிரி தாயார் மற்றும் நரசிம்மரின் பரிபூரண கடாக்ஷத்தால் தான் இந்த அபரிமிதமான தன்மை தன் பிள்ளைகளுக்கு என்று அவரது தாயார் ராமானுஜனை பற்றி அடிக்கடி சொல்லும் வார்த்தை இது. ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் அவர் பட்ட துன்பம் வேறு யாரேனும் பட்டிருப்பார்களா என்பது சந்தேகமே.

பள்ளி படிப்பை வாலாஜாவில் பயின்றார். இன்றளவும் அந்த பள்ளி உள்ளது. அங்கு படிக்கும் மாணவர்கள் பலருக்கே இது குறித்து ஏதும் தெரியாத நிலையில் தான் இன்றைய சூழலில் உள்ளது. ராமானுஜனை பற்றி தெரிந்த சிலருக்கு அவர் கணிதத்தில் என்ன சாதித்தார் என்பது தெரியவில்லை.

அவர் கைப்பட எழுதிய கணித சூத்திரங்களில் எவ்வாறு விடைகளை கண்டறிந்தார் என்பது இன்று வரை புரியாத புதிர்.

ஓர் முறை பள்ளி பருவத்தில் நடந்தே சோளிங்கர் வரை சென்று அங்கு உள்ள குகை போன்ற போந்தில் இருந்து சில கணித தேற்றங்களுக்கு விடை எழுதியதாக குறிப்பிட்டுள்ளார். இன்று அந்த இடத்தில் அப்படி ஒரு இடம் இருந்ததற்கான அடையாளங்கள் இல்லாத வகையில் அந்த மலை குன்றே காணாமல் போய் விட்டது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா????¿

ஆம் அது தான் இன்றைய நிதர்சனமான உண்மை. ஒன்று இரண்டு அல்ல 11 மலை குன்றுகள்…..
ஸ்வாஹா.
வேறென்ன திராவிட சாதனைகளில் இது எல்லாம் சர்வ சாதாரணம் அல்லவா.ஏதோ சாலை அமைப்பதற்கு மற்றைய பயன்பாட்டிற்கோ அல்ல…முற்று முழுதாக மலேசியா சென்று விட்டது.

என்ன செய்ய….
விஷயத்திற்கு வருவோம்.

கணிதத்தை தவிர மற்றைய பாடங்களில் அவருக்கு நாட்டம் இருந்தது இல்லை, பல சமயங்களில் மற்ற பாடங்களில் தேர்ச்சி பெற்றதும் இல்லை.ஆனால் கணிதத்தில் மட்டும் பித்து பிடித்த நிலை தான்.

அவருக்கு இந்த கணித ஆற்றல் பற்றின புரிதலே பல ஆண்டுகள் ஆனது.மீதி இதனை பற்றி மற்றவர்களுக்கு விளக்கவே சரியாக இருந்தது. வெறும் முப்பத்திரண்டு வயது வரை தான் வாழ்ந்தது. ஆனால் சாதித்தது பலதும் அதில் உண்டு. ஐன்ஸ்டீனின் சந்திக்க ஆசைப்பட்ட நபர் என்கிற ரீதியில் மாத்திரமே அன்று பலருக்கும் இவர் குறித்து தெரியும்.

👉இவரது கணித தேற்றங்களுக்கம், சமன்பாடுகளுக்குமான பிண்ணனி படு சுவாரசியமானது. இதில் இவரது தேற்றங்களை அடிப்படையிலான தந்திரங்களை கொண்டே நாஜி படையினர் தகவல் அனுப்ப பயிற்றுவிக்கப்பட்டிருந்தனர். அதுபோலவே அந்நாளில் செய்தி பரிமாற்றத்தை இடை மரித்து கேட்க பயன் படுத்திய தொழில்நுட்பத்தின் ஓர் அங்கம் தான் இன்றைய கணினி என்பது நம்மில் பலருக்கும் இன்றுவரை தெரியாது.

அவ்வாறே இதே பண்புகளின் மற்றோர் வடிவமைப்பு தான் இன்று நாம் பயன்படுத்தும் ATM களின் பணப்பரிமாற்றம் என்பதும் நமக்கு தெரியாது.

இதேபோல் மற்றொரு முக்கியமான பங்களிப்பு ஒன்று உண்டு. அது தான் இன்றைய நியூக்ளியர் டீகோடிங் அல்காரிதம்.
அமெரிக்க அதிபர் என்பதின் ஓர் அடையாள அங்கமாக இன்று பார்க்கப்படும் தொழில்நுட்பம்.

பாரதத்தின் தென் பகுதியில் உள்ள நாம் வான் கணித சாஸ்திரத்தில் கரை கண்டவர்கள். அதனால் தான் பிரதானமாக மூன்று வித வான் சாஸ்திர கணித முறை இன்று வரை நம்மிடம் உண்டு. உதாரணமாக நேற்றைய தினம் 21/12/20 வானில் அறிவியல் அற்புதம் ஒன்று நடந்தது. பூமியில் இருந்து பார்க்க சனி மற்றும் குரு கோள்கள் ஓரே நேர்கோட்டில் வருவது போன்ற தோன்றதை உண்டு பண்ணின ஓர் அற்புதமான நிகழ்வு.

இப்படி சொன்னால் சுலபமாக புரிந்து கொள்ள முடியும்.

ஜோதிட ரீதியாக சனிப் பெயர்ச்சி கடந்த ஜனவரி மாதத்தில் நடைப்பெற்றதாக திருக்கணித பஞ்சாங்கம் சொன்னது, ஆனால் இம்மாதம் வரும் 27 ஆம் தேதியன்று தான் சனிப்பெயர்ச்சி என்று வாக்கிய பஞ்சாங்கம் சொல்கிறது. இவற்றில் எது சரி என்றால் இரண்டுமே சரி என்பதே பதிலாக இருக்கும்.

இது எப்படி சாத்தியம் என்று கேள்வி கேட்டால் விளக்கம் சொல்ல பலர் தடுமாறுவர். அதன் சரியான அர்த்தம் ஒன்று வானில் நட்சத்திர மண்டலத்தில் நடப்பது, மற்றொன்று நாம் வாழும் பூமியில் இருந்து பார்க்க கிடைக்கும் கோணத்தில் அமைவது.

நேற்றைய நிகழ்வு அப்படி பட்ட ஒன்று தான்.

நாம் பூமியில் இருந்து பார்க்க கிடைத்த கோணத்தில் சனியும் குருவும் கிட்டத்தட்ட ஒரே நேர்கோட்டில் அருகில் உள்ளது போன்று தோன்றினாலுமே கூட நிஜத்தில் அவை இரண்டுக்கும் இடையே ஏகப்பட்ட தொலைவு இருந்தது.

சரி உங்களிடத்தில் ஓர் கேள்வி?
வான் சாஸ்திரத்தில் வித்தகர்களாக இருந்த நாம் ஏன் சனி கோள் வரை மாத்திரமே வைத்து கணிதம் செய்து கொண்டு இருக்கிறோம். இன்று உள்ள அறிவியல் வளர்ச்சியில் எண்ணற்ற நட்சத்திர மண்டலங்களை, மற்றும் பல கோள்களை கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலும் தற்போது நாம் இன்னமும் அதே ஒன்பது கிரகங்களை மாத்திரமே பயன் படுத்தி கணிதம் செய்திடும் முறை சரியா??????

-ஜெய் ஹிந்த் ஸ்ரீ ராம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories