அமெரிக்காவைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் கடந்த 26 ஆண்டுகளாக வாக்கிய பிழையுடன் ஞானஸ்தானம் வழங்கி வந்துள்ளார்.
அவரால் வழங்கப்பட்ட ஞானஸ்தானங்கள் செல்லாதவையாக கருதப்படுவதால் ஞானஸ்தானம் பெற்றுகொண்டோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் பாதிரியாராக இருந்தவர் ஆண்ட்ரெஸ் அராக்னோ ( Father Andres Aragno). இவர் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக கிறிஸ்தவர்களுக்கு ஞானஸ்தானம் வழங்கி வந்துள்ளார். இதுவரை பல்லாயிரக்கணக்கானோருக்கு அவர் ஞானஸ்தானம் வழங்கியுள்ளார்.
இந்நிலையில், அவர் வாக்கிய பிழையுடன் ஞானஸ்தானம் வழங்கி வருவது 2021ம் ஆண்டின் மத்தியில் கண்டுபிடிக்கப்பட்டது. வாட்டிகன் தேவாலயம் வகுத்தப்படி நான் உனக்கு ஞானஸ்தானம் வழங்குகிறேன் (I baptize you) என்பதற்கு பதிலாக நாங்கள் உனக்கு ஞானஸ்தானம் வழங்குகிறோம் (we baptize you) என கூறி அவர் ஞானஸ்தானம் வழங்கி வந்துள்ளார்.
இது தொடர்பாக அப்பகுதி மறைமாவட்ட செய்தி தொடர்பாளர் கேட்டி பர்க் கூறுகையில், தந்தை அரங்கோ தவறான வார்த்தையை பயன்படுத்தி ஞானஸ்தானத்தை வழங்கி வந்துள்ளார் என என் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
1995-2021ம் ஆண்டுவரை அவர் எத்தனை பேருக்கு ஞானஸ்தானம் வழங்கியுள்ளார் என்ற சரியான கணக்கு தெரியவில்லை. ஆனால் நிச்சயம் ஆயிரக்கணக்கில் இருக்கும் ‘ என்று தெரிவித்துள்ளார்.
அவர் ஞானஸ்தான் வழங்கியது செல்லாது என்பதால் அவரிடம் ஞானஸ்தானம் பெற்றவர்கள் மீண்டும் ஞானஸ்தான் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே தான் ஞானஸ்தான் வழங்கியதில் தவறு இருப்பதை அரிந்த அரங்கோ தனது பாதிரியார் பணியை துறந்துள்ளார்.