மதுரை-பெங்களூரு ‘வந்தே பாரத்’ ரயிலுக்கு பயணிகள் எதிர்ப்பு!

Published:

railway news - 2026
#image_title

மதுரை -பெங்களூரு வந்தே பாரத் திருச்சியை சுற்றிச் செல்லும் ஆரஞ்ச் நிற வந்தே பாரத் ரயில் பயண நேரம், கட்டணம் அதிகம் என்பதால் தற்போது இந்த ரயிலுக்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பி வருகிறது.இந்த பதிய வந்தே பாரத் ரயிலை திருநெல்வேலி மில் இருந்து நேர்வழியில் பெங்களூர் க்கு இயக்க தென்மாவட்ட பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

மதுரை – பெங்களூரு இடையே இயக்கப்படவுள்ள வந்தே பாரத் ரயில் திருச்சியை சுற்றிச் செல்வதால் பயண நேரம், கட்டணம் அதிகம் உள்ளதாக பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மதுரையில் இருந்து பெங்களூருவுக்கு ஆரஞ்ச் வண்ணத்தில் வந்தே பாரத் ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளது. மதுரையில் அதிகாலை 5:15 மணிக்கு புறப்படும் வந்தேபாரத் ரயில் திருச்சிக்கு காலை 7:15க்கு செல்கிறது.

அங்கிருந்து 7:20 மணிக்கு புறப்பட்டு காலை 9:55 மணிக்கு சேலம் செல்கிறது. அங்கு 10:00 மணிக்கு புறப்பட்டு மதியம் 1:15 மணிக்கு பெங்களூரு எஸ்.எம்.வி., ஸ்டேஷனுக்கு சேருகிறது.

மறுமார்க்கத்தில் பெங்களூரு எஸ்.எம்.வி., ஸ்டேஷனில் மதியம் 1:45 மணிக்கு கிளம்பும் ரயில் இரவு 10:25 மணிக்கு மதுரை வருகிறது. இந்த ரயிலின் சோதனை ஓட்டம் ஜூன் 17 ல் நடைபெற்றது

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

இந்த வந்தே பாரத் ரயிலுக்கு திண்டுக்கல்லில்நிறுத்தம் இல்லை. மேலும் திருச்சியை சுற்றிச் செல்வதால் துாரம் 145 கி.மீ., அதிகரிக்கிறது. 2 மணி நேரம் பயணமும்,கட்டணமும் அதிகம் உள்ளது.

எனவே திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு தனியாக வந்தே பாரத் ரயிலை இயக்கலாம்.

மதுரை-பெங்களூரு வந்தேபாரத் ரயிலை திருநெல்வேலி யில் இருந்து மதுரை விருதுநகர் திண்டுக்கல், கரூர் வழியாக இயக்க வேண்டும்.

இத்தடத்தில் உள்ள முக்கிய வர்த்தக நகரங்களான விருதுநகர் திண்டுக்கல், வந்தே பாரத் ரயில் நின்று செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென் மாவட்ட பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img