அதிர்ச்சி.. செல்லாது.. 26 ஆண்டுகளாக.. தவறான ஞானஸ்நானம் செய்த பாதிரியார்!

Baptism - 2026

அமெரிக்காவைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் கடந்த 26 ஆண்டுகளாக வாக்கிய பிழையுடன் ஞானஸ்தானம் வழங்கி வந்துள்ளார்.

அவரால் வழங்கப்பட்ட ஞானஸ்தானங்கள் செல்லாதவையாக கருதப்படுவதால் ஞானஸ்தானம் பெற்றுகொண்டோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் பாதிரியாராக இருந்தவர் ஆண்ட்ரெஸ் அராக்னோ ( Father Andres Aragno). இவர் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக கிறிஸ்தவர்களுக்கு ஞானஸ்தானம் வழங்கி வந்துள்ளார். இதுவரை பல்லாயிரக்கணக்கானோருக்கு அவர் ஞானஸ்தானம் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், அவர் வாக்கிய பிழையுடன் ஞானஸ்தானம் வழங்கி வருவது 2021ம் ஆண்டின் மத்தியில் கண்டுபிடிக்கப்பட்டது. வாட்டிகன் தேவாலயம் வகுத்தப்படி நான் உனக்கு ஞானஸ்தானம் வழங்குகிறேன் (I baptize you) என்பதற்கு பதிலாக நாங்கள் உனக்கு ஞானஸ்தானம் வழங்குகிறோம் (we baptize you) என கூறி அவர் ஞானஸ்தானம் வழங்கி வந்துள்ளார்.

இது தொடர்பாக அப்பகுதி மறைமாவட்ட செய்தி தொடர்பாளர் கேட்டி பர்க் கூறுகையில், தந்தை அரங்கோ தவறான வார்த்தையை பயன்படுத்தி ஞானஸ்தானத்தை வழங்கி வந்துள்ளார் என என் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

1995-2021ம் ஆண்டுவரை அவர் எத்தனை பேருக்கு ஞானஸ்தானம் வழங்கியுள்ளார் என்ற சரியான கணக்கு தெரியவில்லை. ஆனால் நிச்சயம் ஆயிரக்கணக்கில் இருக்கும் ‘ என்று தெரிவித்துள்ளார்.

அவர் ஞானஸ்தான் வழங்கியது செல்லாது என்பதால் அவரிடம் ஞானஸ்தானம் பெற்றவர்கள் மீண்டும் ஞானஸ்தான் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே தான் ஞானஸ்தான் வழங்கியதில் தவறு இருப்பதை அரிந்த அரங்கோ தனது பாதிரியார் பணியை துறந்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories