அதி பயங்கர லஸ்ஸா வைரஸ்: எச்சரிக்கும் WHO!

vairas - 2026

உலகமே கொரோனா எனும் கொடிய அரக்கனிடம் சிக்கி சின்னாபின்னாமாகி கிடக்கிறது. இரண்டு ஆண்டுகளாகியும் முழுமையாக அதிலிருந்து விடுபட முடியவில்லை.

அதன் லேட்டஸ்ட் வெர்சனான ஒமைக்ரான் வந்த வேகத்தில் அப்படியே தணிந்துவிட்டது. இப்போது உலகம் சிறிது சிறிதாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

இச்சூழலில் அதிர்ச்சியளிக்கும் விதமாக புதிய வைரஸ் காய்ச்சல் ஒன்று பிரிட்டனில் பரவி வருகிறது. அந்த காய்ச்சலுக்கு பெயர் லஸ்ஸா. பெயரை கேட்டால் லேசாக தெரியலாம். ஆனால் இது அதி பயங்கரமானது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இது ஆப்பிரிக்காவில் வாழும் மாஸ்டோமிஸ் எனும் ஒருவகை எலியின் மூலம் மனிதர்களுக்குப் பரவுகிறது. லஸ்ஸா வைரஸ் அரீனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது.

இந்த லஸ்ஸா வைரஸால் பாதிக்கப்பட்ட எலிகளின் சிறுநீரோ மலமோ உணவுகளின் மீது பட்டால், அதை சாப்பிடும் மனிதர்களுக்கு மிக எளிதாகப் பரவுகிறது. அப்படியே ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கும் பரவும். அந்த வகையில் தற்போது பிரிட்டனில் மூன்று பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

1969ஆம் ஆண்டு ஆப்பிக்க நாடான நைஜீரியாவில் தான் லஸ்ஸா வைரஸ் முதன்முதலாக கண்டறியப்பட்டது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இந்த வைரஸ் தொற்று அடிக்கடி ஏற்படுகிறது.

பிரிட்டனில் 1988ஆம் ஆண்டு இது பரவியது. அன்றிலிருந்து 2009ஆம் ஆண்டு வரை 8 பேரை தாக்கியுள்ளது. எபோலா, மலேரியா, டைபாய்டு போன்ற ரத்தக்கசிவு காய்ச்சல் போன்றது தான் லஸ்ஸா காய்ச்சல். இதன் காரணமாகவே லஸ்ஸா காய்ச்சலை கண்டறிவது மிக மிக கடினம். லஸ்ஸாவின் தாக்கம் 2 முதல் 21 நாட்கள் வரை இருக்கும்.

லேசான அறிகுறிகள் இருந்தாலும் அவ்வளவு சீக்கீரத்தில் கண்டறிய முடியாது. ஆரம்பத்தில் காய்ச்சல், உடல்சோர்வை கொடுக்கும். நாட்கள் செல்ல செல்ல தலைவலி, தொண்டை வலி, தசை வலி, மார்பு வலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, இருமல், வயிற்றுவலி உள்ளிட்ட அறிகுறிகளும் ஏற்படும்.

தீவிரமடைந்தால் முக வீக்கம், வாய், மூக்கு, பிறப்புறுப்பு, இரைப்பை குழாய் ஆகியவற்றியிருந்து ரத்தக்கசிவு ஏற்படும். நுரையீரலிலும் பாதிப்பை உண்டாக்கும். குறை ரத்த அழுத்தமும் உண்டாகும்.

தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் 14 நாட்களுக்குள் மரணமடைவார்கள். ஆரம்பத்திலேயே கண்டறிந்த சிகிச்சையளித்தால் ஓரளவு குணப்படுத்த முடியும்.

இல்லையெனில் மரணத்தின் வாசலை எட்டிப் பார்க்க வேண்டி வரும். லஸ்ஸா காய்ச்சலால் ஆண்டுக்கு 1 லட்சம் முதல் 3 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். அதில் 5,000 பேர் உயிரிழக்கின்றனர்.

நோயாளிகளுக்கு ரிபாவிரின் (Ribavirin) மருந்து கொடுக்கப்படுகிறது. இது நல்ல பலனைக் கொடுக்கிறது. ஆரம்பக்கட்டத்தில் கொடுக்கப்பட்டால் எளிதில் குணமடையலாம். இந்தியாவில் லஸ்ஸா வைரஸ் பரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Entertainment News

Popular Categories