28-05-2023 4:04 PM
More

    Shut up. Shall We?

    A Centenary Plus, Retold 

    Homeசற்றுமுன்ஷாக் அடிக்கும் மின் கட்டண உயர்வு! விடியலை நோக்கி இருளில் காலந்தள்ள வேண்டிய அவலம்!
    spot_img

    சினிமா...

    Featured Articles

    To Read in Indian languages…

    ஷாக் அடிக்கும் மின் கட்டண உயர்வு! விடியலை நோக்கி இருளில் காலந்தள்ள வேண்டிய அவலம்!

    தமிழகத்தில் எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் மின் கட்டணம் உயர்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழகத்தில் புதிதாக உயர்த்தப்பட்ட மின்கட்டணம் இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் நிதிச்சுமையை ஏற்பட்டுள்ளதால் வருவாயை ஈட்ட மின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது. இது மக்களை பாதிக்கும் என எதிர்கட்சியினர் குரல் கொடுத்தாலும் ஏனைய மாநிலங்களை விட தமிழக மின் கட்டணம் குறைவு தான், மேலும் 8 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்ததையும் அரசு மக்களுக்கு கூறியது.

    இந்நிலையில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. அதே நேரத்தில் 100 யூனிட் வரை இலவசம் என்பது தொடரும். 2027 வரை இந்த கட்டண உயர்வு அமலில் இருக்கும். குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிப்பாட்டுதலங்கள் முதலிய மின் கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.
    புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். அதன்படி, அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.

    புதிய மின்கட்டண உயர்வு குறித்த விவரம் வருமாறு:

    TNEB

    இரு மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63.35 இலட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு (26.73 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.27.50 உயர்த்தப்படும். அதாவது இரு மாதங்களுக்கு ரூ.55 உயர்வு.

    இரு மாதங்களுக்கு மொத்தம் 300 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 36.25 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (15.30 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 உயர்த்தப்படும். அதாவது இரு மாதங்களுக்கு ரூ. 145 உயர்வு.

    இரு மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (7.94 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 உயர்த்தப்படும். அதாவது இரு மாதங்களுக்கு ரூ.295 உயர்வு.

    இரு மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 10.56 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (4.46 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.297.50 உயர்த்தப்படும். அதாவது இரு மாதங்களுக்கு ரூ.595 உயர்வு.

    இரு மாதங்களுக்கு மொத்தம் 600 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 3.14 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (1.32 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.155 உயர்த்தப்படும். இரு மாதங்களுக்கு ரூ.310 உயர்வு.

    இரு மாதங்களுக்கு மொத்தம் 700 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 1.96 இலட்சம் வீட்டுமின் நுகர்வோர்களுக்கு (0.83 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.275 உயர்த்தப்படும். இரு மாதங்களுக்கு ரூ.550 உயர்வு.

    800 யூனிட் வரை பயன்படுத்துவோர் மாதம் ஒன்றிற்கு 395 வீதம் 2 மாதங்களுக்கு ரூ. 790 செலுத்த வேண்டும்.

    900 யூனிட் வரை மாதம் ஒன்றுக்கு ரூ. 565, அதாவது இரு மாதங்களுக்கு ரூ.1,130 செலுத்த வேண்டும்.

    திமுக., தேர்தல் அறிக்கையில் மாதாந்திர கணக்கீடு செய்யப் படும் என்று அறிவித்திருந்தது. ஆனால், அது குறித்து எந்த அறிவிப்பும் இல்லாமல், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கீடு என்ற நிலையே தொடர்வதால், நுகர்வோர்கள் அதிக அளவில் மின் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும், தற்போது குடிசை விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டுத் தலங்கள் முதலிய மின் கட்டண பிரிவுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.

    100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் குறைக்கப்பட்ட மின்சாரத்துக்குரிய மின் மானியத்தை நுகர்வோர் விரும்பும் பட்சத்தில் “மின் மானியத்தை தாமாக விட்டுக் கொடுக்கும்” திட்டம் மூலம் அமல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மின் கட்டண உயர்வு குறித்த கருத்துக்களை தெரிவிக்கலாம் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மின்சார வாரிய இணையதளங்களில் மின்சார கட்டண விவரங்கள் வெளியிடப்படும் என்றும் மின் கட்டண உயர்வு தொடர்பான கருத்துகளை தெரிவிக்க 30 நாட்கள் காலஅவகாசம் வழங்கியும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருந்தது.

    அதன்படி பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்ட நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த புதிய மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    தமிழகத்தில் எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் மின் கட்டணம் உயர்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    யூனிட் வாரியாக புதிய மின் கட்டண விவரம் பார்க்க…

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    four × four =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Follow us on Social Media

    19,025FansLike
    389FollowersFollow
    83FollowersFollow
    0FollowersFollow
    4,749FollowersFollow
    17,300SubscribersSubscribe

    ஆன்மிக