ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே  அனுமதியின்றி இம்மானுவேல் சேகரன் சிலை வைத்ததால் பரபரப்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அனுமதியின்றி வைத்த இமானுவேல் சேகரின் சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இமானுவேல்சேகரின் 65 ஆவது குருபூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக விருதுநகர் இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் கிராமத்தில்  அமச்சியார்பட்டி பகுதியில் அரசு மற்றும் நீதிமன்றத்தின் உரிய அனுமதி பெறாமல் அப்பகுதி மக்கள் இம்மானுவேல் சேகரனுக்கு சனிக்கிழமை சிலை வைத்துள்ளனர். 

இதுகுறித்த தகவல் அறிந்து அங்கு சென்ற வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் அப்பகுதி மக்களிடம் முறையான அனுமதி பெற்ற பின்பு தான் சிலை வைக்க வேண்டும் ஆகையால் நீங்கள் வைத்த சிலையை நீங்களே அகற்றி விடுங்கள் என தெரிவித்தனர். இதனை ஏற்க மறுத்த அப்பகுதி மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர், காவல் துணைக் கண்காணிப்பாளர் சபரிநாதன் ஆகியோர் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். பின்னர் தகவல் கிடைத்து சார் ஆட்சியர் பிரித்திவிராஜ் விரைந்து வந்து

 மற்றும் எஸ் பி மனோகர், வட்டாட்சியர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன்

சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.இதனை தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்ட சிலையை சுற்றி தகர கொட்டகை அமைத்து சிலையை மறைத்து வைத்துள்ளனர். 

இன்று 11  ந்தேதி மாலை 4 மணி முதல் 6 மணி வரை புதிதாக அமைக்கப்பட்ட இம்மானுவேல் சேகரன் சிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தகரக் கொட்டகை திறக்கப்படும். அப்போது பொங்கல் வைத்து குரு பூஜையை கொண்டாடிக் கொள்ளலாம்.

பின்னர் மீண்டும் தகரக் கொட்டகையால் புதிதாக அமைக்கப்பட்ட சிலை மறைத்து வைக்கப்படும். வருவாய்த்துறையினர் மற்றும் நீதிமன்றம் அனுமதி பெற்ற பிறகு நிரந்தரமாக சிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தகரக் கோட்டை அகற்றப்படும் என பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டது.

புதிய சிலை அமைக்கப்பட்டதாலும், போலீசார் அதிக அளவு  குவிக்கப்பட்டதாலும், பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு இருந்ததாலும் மம்சாபுரம் அமைச்சியார்பட்டி பகுதியில் சுமார் 7 மணி நேரம்  பரபரப்பான சூழல் நிலவியது. மேலும் எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

IMG 20220910 WA0103 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

Topics

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

Entertainment News

Popular Categories