நேதாஜி குறித்த ஆவணங்கள் பாஜக.,வின் ஆர்வம் காரணமாக வெளிவருகின்றன: அனுஜ் தார்

புது தில்லி:

பாஜகவின் ஆர்வம் காரணமாகவே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த ஆவணங்கள் வெளிவருகின்றன என்று மூத்த பத்திரிகையாளரும், ஆய்வாளருமான அனுஜ் தார் தெரிவித்துள்ளார். நேதாஜி குறித்த ஆவணங்களை, அவரது பிறந்த தினமான ஜனவரி 23ஆம் தேதி முதல் வெளியிட மத்திய அரசு முன்னர் அறிவித்திருந்தது.

நேதாஜி மாயமானது குறித்த “இந்தியாஸ் பிக்கஸ்ட் கவர்அப்’ என்ற ஆங்கிலப் புத்தகம் தொடர்பாக தில்லி புத்தகத் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் பேசியபோது,

netaji

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் காணாமல் போனது குறித்த ஆவணங்களை வெளியிடுவது தொடர்பாக, அவரது குடும்பத்தினரை கடந்த அக்.14ல் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் அவர் குறித்த ஆவணங்கள் வெளியாகின. ஆகவே பாஜகவின் ஆர்வம் காரணமாகவே நேதாஜி பற்றிய ஆவணங்கள் வெளிவருகின்றன என்றே நான் நினைக்கிறேன். நேதாஜி மாயமானது குறித்த ஆய்வை நான் கடந்த 2001ஆம் ஆண்டு தொடங்கியபோது, அவர் மாயமான விவகாரம் தொடர்பாக யாரும் ஆர்வம் காட்டவில்லை.

இதன் காரணமாகவே, நேதாஜி மரணம் தொடர்பான அரசு ரகசியங்களைப் பற்றி பேசுவது என்று நாங்கள் முடிவு செய்தோம். கடந்த 2001ஆம் ஆண்டு நேதாஜி பற்றிய ஆவணங்களைக் கோரி மனு கொடுத்தோம். ஆனால், ஆவணங்களை வெளியிடுமாறு அழுத்தம் கொடுப்பதற்கு அந்த மனுக்களால் உதவ முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக, 2005ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேலும் மனுக்களைக் கொடுத்து அழுத்தம் கொடுத்தோம்.

அதன் காரணமாக, மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில், நேதாஜியின் மரணம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஷா நவாஸ் குழு, கோஸ்லா குழு ஆகியவற்றின் அறிக்கைகளைப் பார்வையிடுவதற்கு எங்களுக்கு அனுமதி கிடைத்தது. சுமார் 15,000 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கைகளின் மூலம், கடந்த 1948 முதல் 20 ஆண்டுகளுக்கு நேதாஜியின் குடும்பத்தினரை மத்திய அரசு உளவு பார்த்தது தெரியவந்தது. இதுகுறித்து, 1955ஆம் ஆண்டில் நேதாஜியின் மனைவி அவரது உறவினருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், தான் கணவரை இழந்த பெண் அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார். விமான விபத்தில் இருந்து தப்பி இந்தியாவுக்கு வந்த நேதாஜி, உத்தரப் பிரதேச மாநிலம், ஃபைசாபாதில் கடந்த 1985 வரை பகவான்ஜி என்ற பெயரில் துறவியாக வாழ்ந்தார் என்று கூறுகின்றனர். வங்காளத்திலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ள அவரது கையெழுத்துப் பிரதிகள், நேதாஜியின் கையெழுத்துக்களுடன் ஒத்துப் போகின்றன என்றார் அனுஜ் தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories