முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். ஆட்சி காலத்தில் மாநில அமைச்சராக பொறுப்பு வகித்தவா் குழந்தைவேலு. மேலும் இவா் 1984-89ம் ஆண்டுகளில் கோபிச்செட்டிப் பாளையம் மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தவர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவா் உயிரிழந்து விட்ட நிலையில், அவரது மனைவி ரத்தினம் மட்டும் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தார்.
இந்நிலையில் ரத்தினம் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டு உள்ளார். இது தொடா்பாக காவல் துறையினா் கூறுகையில், கொலை செய்யப்பட்ட ரத்தினம் கொலை செய்யப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன்னா் தான் திருப்பூரில் உள்ள அவரது மகளுக்கு போன் செய்து பேசியுள்ளார்.
அப்போது, மகன் பிரவீன் சொத்தில் பங்கு கேட்டு தகராறு செய்வதாக தெரிவித்துள்ளனர். ரத்தினமும், அவரது மகளும் பேசிக்கொண்டிருந்த நிலையில் திடீரென இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பின்னா் அவரது மகள் மீண்டும் ரத்தினத்திற்கு போன் செய்துள்ளார். ஆனால் அவா் பதில் அளிக்கவில்லை.
இதனைத் தொடா்ந்து அருகில் இருந்த உறவினா்களுக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார். அதன் படி உறவினா்கள் சென்று பார்த்தபோது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ரத்தினம் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். தற்போது அவரது உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
லண்டனில் படித்து வந்த பிரவீன் கடந்த மாதம் தான் சென்னை வந்துள்ளார். அவா் இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவரை தொடா்ந்து தேடி வருவதாக காவல் துறையினா் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று டெல்ல்லியில் வைத்து அவரி போலீசார் கைது செய்தனர்.