மசாலா பாத்
தேவையானவை:
அரிசி – ஒரு கப்,
வெங்காயம் – 1,
பச்சைப் பட்டாணி – அரை கப் (வேக வைக்கவும்), க்
கேரட் – 1 (பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய கோஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது,
இஞ்சி துருவல் – அரை டீஸ்பூன்,
பூண்டு – அரை டீஸ்பூன்,
பச்சைமிளகாய் – 2 (துண்டுகளாக நறுக்கவும்)
பொடித்த முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன், திராட்சை – ஒரு டேபிள்ஸ்பூன், வேர்க்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன்,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
மசாலா தூள் – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
எலுமிச்சை சாறு – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
அரிசியைக் கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும், முந்திரி, திராட்சை, வேர்க்கடலையைப் போட்டு வறுக்கவும். சீரகம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சி துருவல், பூண்டு, வெங்காயம் சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், மற்ற காய்கறிகளை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். மசாலா தூள், மஞ்சள்தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து ஊற வைத்துள்ள அரிசியை வடிய வைத்து, அதனுடன் சேர்த்து, சாதமாக சமைத்து சூடாகப் பரிமாறவும்.