பெண்களிடம் செல்போன் எண் வாங்கி அத்துமீறல்… காவல் ஆய்வாளருக்கு கட்டாயப் பணி ஓய்வு!

tamilnadu police
tamilnadu police
  • பெண்களிடம் செல்போன் எண் வாங்கி அத்துமீறல்..
  • காவல் ஆய்வாளருக்கு கட்டாய பணி ஓய்வு..!
  • டிஐஜி அதிரடி நடவடிக்கை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் ஒருவருக்கு கட்டாயப் பணி ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

புகார் அளிக்க காவல் நிலையம் வரும் பெண்களின் செல்போன் எண்களை வாங்கிக்கொண்டு, பின்னர் அவர்களிடம் வக்கிரமாக பேசியுள்ள காவல் ஆய்வாளர், புகார்களின் பேரில் விசாரிக்கப் பட்டு, கட்டாயப் பணி ஓய்வுக்கு உள்ளாகியிருக்கிறார்.

திருச்சி மாவட்டம், சிறுகனூர் காவல்நிலைய ஆய்வாளராக பணிபுரிந்து வந்த மணிவண்ணன் இந்தக் காரணத்துக்காக, கட்டாய பணி ஓய்வு அளிக்கப் பட்டு, வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

திருச்சி பொன்மலை, பெரம்பலூர் டவுன் மற்றும் திருச்சி சிறுகனூர் ஆகிய இடங்களில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றியவர் மணிவண்ணன். இவர், தன்னிடம் புகார் அளிக்கவரும் பெண்களிடம் செல்போன் நம்பரை வாங்கிக் கொண்டு நள்ளிரவு நேரத்தில் விசாரணை என்ற பெயரில் வரம்பு மீறிப் பேசுவதாக புகார்கள் வந்தன.

மணிவண்ணனின் ஆபாசப் பேச்சுக்கு ஒத்துழைக்காத பெண்களுக்கு தொல்லை கொடுப்பதோடு, புகாருக்குள்ளான நபர்களுக்கு சாதகமாக வழக்கை முடித்துக் கொடுப்பார் என புகார்கள் வந்துள்ளன. குறிப்பாக, மணிவண்ணன் மீது பெண் போலீசாரிடம் வக்கிரமாக பேசுவது உள்ளிட்ட ஏராளமான புகார்கள் உயரதிகாரிகளிடம் கூறப்பட்டுள்ளன.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

அண்மையில் சிறுகனூர் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கச் சென்ற பெண் ஒருவரின் செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டு இரவு நேரத்தில் வக்கிரமாகப் பேசி தொல்லை கொடுத்துள்ளார். மேலும், புகார் கூறப்பட்டிருந்த நபர்களுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார் என்று, பாதிக்கப்பட்ட பெண் அப்போதைய திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணனிடம் நேரடியாக புகார் அளித்தார்.

இதை அடுத்து, மணிவண்ணன் மீது தெரிவிக்கப் பட்ட புகார்கள் குறித்து, டிஐஜி பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில், மணிவண்ணன் இது போல் பல பெண்களிடம் வரம்பு மீறி நடந்து கொண்டது தெரியவந்தது. எனவே, கடந்த ஜூன் 29 ஆம் தேதி இன்ஸ்பெக்டருக்கு கட்டாய ஓய்வு அளித்து அவரை காவல் பணியில் இருந்து விடுவித்து அனுப்புமாறு, டிஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

இந்நிலையில் கடந்த ஜூன் 30ஆம் தேதி டிஐஜி பாலகிருஷ்ணன் பணி மாற்றலாகி சென்றார். இதனால், தாம் கட்டாய ஓய்வு உத்தரவில் இருந்து தப்பிவிடலாம் என்று நினைத்திருந்த மணிவண்ணன், சிறுகனூர் காவல் நிலைய பணிக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு கட்டாயப் பணி ஓய்வு உத்தரவு நகல் வழங்கப்பட்டுள்ளது.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

காவல் ஆய்வாளர் மணிவண்ணன் ஓய்வு பெற இன்னும் 6 ஆண்டுகள் உள்ளது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

Topics

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

Entertainment News

Popular Categories