பெண்களிடம் செல்போன் எண் வாங்கி அத்துமீறல்… காவல் ஆய்வாளருக்கு கட்டாயப் பணி ஓய்வு!

tamilnadu police
tamilnadu police
  • பெண்களிடம் செல்போன் எண் வாங்கி அத்துமீறல்..
  • காவல் ஆய்வாளருக்கு கட்டாய பணி ஓய்வு..!
  • டிஐஜி அதிரடி நடவடிக்கை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் ஒருவருக்கு கட்டாயப் பணி ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

புகார் அளிக்க காவல் நிலையம் வரும் பெண்களின் செல்போன் எண்களை வாங்கிக்கொண்டு, பின்னர் அவர்களிடம் வக்கிரமாக பேசியுள்ள காவல் ஆய்வாளர், புகார்களின் பேரில் விசாரிக்கப் பட்டு, கட்டாயப் பணி ஓய்வுக்கு உள்ளாகியிருக்கிறார்.

திருச்சி மாவட்டம், சிறுகனூர் காவல்நிலைய ஆய்வாளராக பணிபுரிந்து வந்த மணிவண்ணன் இந்தக் காரணத்துக்காக, கட்டாய பணி ஓய்வு அளிக்கப் பட்டு, வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

திருச்சி பொன்மலை, பெரம்பலூர் டவுன் மற்றும் திருச்சி சிறுகனூர் ஆகிய இடங்களில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றியவர் மணிவண்ணன். இவர், தன்னிடம் புகார் அளிக்கவரும் பெண்களிடம் செல்போன் நம்பரை வாங்கிக் கொண்டு நள்ளிரவு நேரத்தில் விசாரணை என்ற பெயரில் வரம்பு மீறிப் பேசுவதாக புகார்கள் வந்தன.

மணிவண்ணனின் ஆபாசப் பேச்சுக்கு ஒத்துழைக்காத பெண்களுக்கு தொல்லை கொடுப்பதோடு, புகாருக்குள்ளான நபர்களுக்கு சாதகமாக வழக்கை முடித்துக் கொடுப்பார் என புகார்கள் வந்துள்ளன. குறிப்பாக, மணிவண்ணன் மீது பெண் போலீசாரிடம் வக்கிரமாக பேசுவது உள்ளிட்ட ஏராளமான புகார்கள் உயரதிகாரிகளிடம் கூறப்பட்டுள்ளன.

அண்மையில் சிறுகனூர் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கச் சென்ற பெண் ஒருவரின் செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டு இரவு நேரத்தில் வக்கிரமாகப் பேசி தொல்லை கொடுத்துள்ளார். மேலும், புகார் கூறப்பட்டிருந்த நபர்களுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார் என்று, பாதிக்கப்பட்ட பெண் அப்போதைய திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணனிடம் நேரடியாக புகார் அளித்தார்.

இதை அடுத்து, மணிவண்ணன் மீது தெரிவிக்கப் பட்ட புகார்கள் குறித்து, டிஐஜி பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில், மணிவண்ணன் இது போல் பல பெண்களிடம் வரம்பு மீறி நடந்து கொண்டது தெரியவந்தது. எனவே, கடந்த ஜூன் 29 ஆம் தேதி இன்ஸ்பெக்டருக்கு கட்டாய ஓய்வு அளித்து அவரை காவல் பணியில் இருந்து விடுவித்து அனுப்புமாறு, டிஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

இந்நிலையில் கடந்த ஜூன் 30ஆம் தேதி டிஐஜி பாலகிருஷ்ணன் பணி மாற்றலாகி சென்றார். இதனால், தாம் கட்டாய ஓய்வு உத்தரவில் இருந்து தப்பிவிடலாம் என்று நினைத்திருந்த மணிவண்ணன், சிறுகனூர் காவல் நிலைய பணிக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு கட்டாயப் பணி ஓய்வு உத்தரவு நகல் வழங்கப்பட்டுள்ளது.

காவல் ஆய்வாளர் மணிவண்ணன் ஓய்வு பெற இன்னும் 6 ஆண்டுகள் உள்ளது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

Topics

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

ஐபிஎல் 2026: எங்கே போகிறது சென்னை அணியின் பயணம்?

சென்ணையில் நடந்த இந்தாஅட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பரிதாபமாகத் தோல்வியடைந்தது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories