மாமூல் தர மறுத்த கடைக்காரரை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியவர் கைது

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருகே மாமூல் தர மறுத்த கடைக்காரர் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வில்லியனூர் அருகே சுல்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாதின் (36) அந்தப் பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று மாலை 4 மணி அளவில் இவருடைய டீக்கடைக்கு குடிபோதையில் வந்த இளைஞர் கடையில் இருந்த பாதினிடம் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார்.  ஆனால் பாதின் அந்த இளைஞரிடம் மாமூல் தர முடியாது என்று கூறி, அவரை கடையைவிட்டு வெளிறும்படி கூறினார். ஆனால் அந்த இளைஞர் பாதினிடம் தகராறு செய்தபடி, ‘‘மாமூல் தர மறுத்தால் கடையைக் கொளுத்திவிடுவேன்’’ என்று கூறி வெளியேறினாராம். இந்நிலையில்,  மாலை 6 மணி அளவில் கடையில் பாதின் பஜ்ஜி தயாரித்துக் கொண்டிருந்தபோது, மாமூல் கேட்டு மிரட்டிய அந்த இளைஞர் கையில் பெட்ரோல் பாட்டிலுடன் கடைக்கு வந்துள்ளார்.  திடீரென பாட்டிலைத் திறந்து பாதினின் மீது பெட்ரோலை ஊற்றினார். அடுப்பு அருகே நின்று பஜ்ஜி தயாரித்துக் கொண்டிருந்த பாதின் மீது பெட்ரோல் ஊற்றப் பட்டதும், அது பற்றிக் கொண்டது. அதனால் அவர் உதவி கேட்டு அலறியுள்ளார். அப்போது அருகில் இருந்த அவரின் தந்தை முகமது ஐசக் உடனடியாக தண்ணீரை எடுத்து பாதின் மீது ஊற்றியுள்ளார். பாதினின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பக்கத்துக் கடைக்காரர்கள் பெட்ரோல் பாட்டிலுடன் தப்பி ஓட முயன்ற அந்த இளைஞரைப் பிடித்து வில்லியனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதை அடுத்து, சுல்தான்பேட்டை பகுதி வியாபாரிகள் ஒன்று சேர்ந்து வில்லியனூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். மாமூல் கேட்டு மிரட்டி, பாதின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்ற இளைஞர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி முறையிட்டனர். இதை அடுத்து,  பாதின் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். அந்தப் புகாரின் பேரில்,  பிடிபட்ட இளைஞரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர் வில்லியனூர் அருகே உள்ள அரும்பார்த்தபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் (31) என்பதும், பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி என்பதும் தெரிய வந்தது. இதை அடுத்து கணேசனை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories