புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருகே மாமூல் தர மறுத்த கடைக்காரர் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வில்லியனூர் அருகே சுல்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாதின் (36) அந்தப் பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று மாலை 4 மணி அளவில் இவருடைய டீக்கடைக்கு குடிபோதையில் வந்த இளைஞர் கடையில் இருந்த பாதினிடம் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால் பாதின் அந்த இளைஞரிடம் மாமூல் தர முடியாது என்று கூறி, அவரை கடையைவிட்டு வெளிறும்படி கூறினார். ஆனால் அந்த இளைஞர் பாதினிடம் தகராறு செய்தபடி, ‘‘மாமூல் தர மறுத்தால் கடையைக் கொளுத்திவிடுவேன்’’ என்று கூறி வெளியேறினாராம். இந்நிலையில், மாலை 6 மணி அளவில் கடையில் பாதின் பஜ்ஜி தயாரித்துக் கொண்டிருந்தபோது, மாமூல் கேட்டு மிரட்டிய அந்த இளைஞர் கையில் பெட்ரோல் பாட்டிலுடன் கடைக்கு வந்துள்ளார். திடீரென பாட்டிலைத் திறந்து பாதினின் மீது பெட்ரோலை ஊற்றினார். அடுப்பு அருகே நின்று பஜ்ஜி தயாரித்துக் கொண்டிருந்த பாதின் மீது பெட்ரோல் ஊற்றப் பட்டதும், அது பற்றிக் கொண்டது. அதனால் அவர் உதவி கேட்டு அலறியுள்ளார். அப்போது அருகில் இருந்த அவரின் தந்தை முகமது ஐசக் உடனடியாக தண்ணீரை எடுத்து பாதின் மீது ஊற்றியுள்ளார். பாதினின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பக்கத்துக் கடைக்காரர்கள் பெட்ரோல் பாட்டிலுடன் தப்பி ஓட முயன்ற அந்த இளைஞரைப் பிடித்து வில்லியனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதை அடுத்து, சுல்தான்பேட்டை பகுதி வியாபாரிகள் ஒன்று சேர்ந்து வில்லியனூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். மாமூல் கேட்டு மிரட்டி, பாதின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்ற இளைஞர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி முறையிட்டனர். இதை அடுத்து, பாதின் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். அந்தப் புகாரின் பேரில், பிடிபட்ட இளைஞரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர் வில்லியனூர் அருகே உள்ள அரும்பார்த்தபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் (31) என்பதும், பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி என்பதும் தெரிய வந்தது. இதை அடுத்து கணேசனை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Less than 1 min.Read
மாமூல் தர மறுத்த கடைக்காரரை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியவர் கைது
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் டிச.9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
சற்றுமுன்
‘அந்த’ மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது; ஆளுநரிடம் இந்து முன்னணி மனு!
கோயில் நிலங்களை கபளீகரம் செய்யும் விதமாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று
நிகழ்ச்சிகள்
சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!
எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.
தமிழகம்
அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!
இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...
கட்டுரைகள்
அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!
டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும், அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் டிச.9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
சற்றுமுன்
‘அந்த’ மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது; ஆளுநரிடம் இந்து முன்னணி மனு!
கோயில் நிலங்களை கபளீகரம் செய்யும் விதமாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று
நிகழ்ச்சிகள்
சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!
எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.
தமிழகம்
அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!
இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...
கட்டுரைகள்
அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!
டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும், அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
சற்றுமுன்
தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.
இந்தியா
கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

