December 6, 2025, 2:59 AM
26 C
Chennai

மினி பஸ் கவிழ்ந்து மாணவர்கள் இருவர் பலி: 20 பேர் படுகாயம்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் மினி பஸ் கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் 2 பேர் மரணமடைந்தனர்.20 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

IMG 20231030 WA0209 - 2025
#மினி பஸ் கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் 2 பேர் மரணமடைந்தனர்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மினி பஸ் பள்ளத்திற்குள் கவிழ்ந்ததில் பள்ளி மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். டிரைவர், கண்டக்டர் உட்பட பயணிகள் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இது பற்றிய விபரம்

வத்திராயிருப்பிலிருந்து வ. புதுப்பட்டிக்கு அர்ச்சுனாபுரம் கிராமம் வழியாக மினி பஸ் இயங்கி வருகிறது. நேற்று மாலை 4.45 மணியளவில் வத்திராயிருப்பிலிருந்து புறப்பட்டு புதுப்பட்டி நோக்கி சென்றது. பஸ்ஸில் வத்திராயிருப்பு பள்ளிகளில் படிக்கும் வ.புதுப்பட்டி அர்ச்சுனாபுரம் கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகள் 30 பேர் உள்ளே இருந்தனர்.

பஸ் அர்ச்சுனாபுரத்தை கடந்து கிறிஸ்டியான் பேட்டை என்ற ஊரை நோக்கி சென்று கொண்டிருந்த போது அங்கிருந்த போதர்குளம் கண்மாய் வளைவில் திரும்பிய போது பஸ் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த மின்கம்பம் மீது மோதி மிகவும் பள்ளமாக இருந்த தோப்பிற்குள் கவிழ்ந்தது. இதில் பஸ்ஸில் பயணம் செய்த வ.புதுப்பட்டியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவர்கள் பாண்டி, நந்தகுமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். டிரைவர் கண்டக்டர் உட்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த விவசாயிகள் மற்றும் கிறிஸ்டியன் பேட்டை பொதுமக்கள் ஓடி வந்து கவிழ்ந்து கிடந்த பஸ் கண்ணாடியை உடைத்து பயணிகளை வெளியே கொண்டு வந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் காயமடைந்த பயணிகளை வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கும் படுகாயம் அடைந்தவர்களை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இறந்த மாணவர்களின் உடல்களை பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அம் மாணவர்களின் உறவினர்கள் பஸ் உரிமையாளரை கைது செய்யக்கோரி ஆஸ்பத்திரி முன்பாக கூமாபட்டி மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். காயமடைந்தவர்களில் சிபின் லூர்துராஜ் என்ற மாணவர் மிகவும் படுகாயமுற்று மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டார். மேலும் பள்ளி மாணவ, மாணவிகள் சுமித்ரா தேவி பாண்டீஸ்வரி ராஜ்குமார் லாவண்யா முத்துக்குமார் ராஜேஷ், மீராதேவி உட்பட 16 மாணவர்களும் மற்ற பயணிகளும் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில் இந்த வழித்தடத்தில் இயங்கும் மினி பஸ்ஸில் புதிதாக வாகனம் ஓட்டும் பயிற்சி டிரைவர்களை மட்டுமே நியமிக்கின்றனர் அதன் உரிமையாளர்கள். ஏற்கனவே இந்த ரோடு மிகவும் குறுகலாக ஆபத்தானதாக உள்ளது. ஒரு பஸ் வந்தால் எதிரே வரும் வாகனங்கள் ஒதுங்குவதற்கு கூட வழி இல்லாத நிலை உள்ளது. இந்நிலையில் பயிற்சி டிரைவர்கள் அடிக்கடி இந்த வாகனத்தில் விபத்தை ஏற்படுத்தி வருகின்றனர் இது தெரிந்தும் யாரும் கண்டு கொள்வதில்லை இதனால் தான் இந்த கோர விபத்து நடந்தது என்றனர்.

பஸ் மின்கம்பத்தில் மோதியபோது இயற்கையாக அங்கு மின் தடை ஏற்பட்டிருந்தது. அதன் காரணமாக மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. அந்நேரம் மின் சப்ளை இருந்திருந்தால் பஸ் மீது விழுந்த உயர் அழுத்த மின் கம்பிகளால் மின்சாரம் தாக்கி மொத்த பயணிகளும் உயிர் தப்பி இருக்க முடியாது என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories