ஆயுள் சான்றிதழ் கொடுக்க ஓய்வூதியதாரர்களை நேரில் வர வற்புறுத்தக் கூடாது: வங்கிகளுக்கு உத்தரவு

indian-government புது தில்லி: ஆயுள் சான்றிதழைக் கொடுக்க ஓய்வூதியதாரர்கள் நேரில் வர வேண்டும் என்று அவர்களை வற்புறுத்தக் கூடாது என்று வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாதம் தோறும் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் ஆண்டு தோறும் தங்கள் ஆயுள் சான்றிதழை, அவர்கள் ஓய்வூதியம் பெறும் வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆயுள் சான்றிதழை எம்.பி., எம்.எல்.ஏ., மாஜிஸ்திரேட்டு, கெஸட் அதிகாரி, சப்–இன்ஸ்பெக்டர் தரத்துக்கு மேல் உள்ள போலீஸ் அதிகாரி, வட்டார வளர்ச்சி அதிகாரி, தாசில்தார், கருவூல அதிகாரி என இவர்களில் யாராவது ஒருவர் சரிபார்த்து, கையெழுத்து போட்டிருந்தால், அந்த சான்றிதழ்களை கொடுக்க ஓய்வூதியதாரர்கள் நேரில் வங்கிக்கு வர வேண்டாம். வெளிநாடுகளில் வசிக்கும் ஓய்வூதியதாரர்களுக்கு, அவர்களது சான்றிதழ்களில் மாஜிஸ்திரேட்டு, நோட்டரி அல்லது தூதரக அதிகாரி ஒருவர் கையெழுத்து போட்டிருந்தால், அவரும் வங்கிக்கு நேரில் வரவேண்டிய அவசியமில்லை. அவர்களின் பிரதிநிதி ஒருவரே இந்த சான்றிதழை வங்கியில் செலுத்தலாம். ஆனால் ஓய்வூதியதாரர்கள், தங்கள் தள்ளாத வயதிலும் ஆயுள் சான்றிதழ்களை ஓய்வூதிய ஆணையுடன் சமர்ப்பிக்க, வங்கிக்கு நேரில் வர வேண்டும் என சமீபகாலமாக வங்கிகள் கட்டாயப்படுத்தி வருவதாகவும், இதனால் ஓய்வூதியதாரர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாவதாகவும் புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து ஓய்வூதியதாரர்களின் பல்வேறு சங்க பிரதிநிதிகள், இந்த பிரச்சினையை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றன. இதை பரிசீலித்த மத்திய அரசு, ‘ஓய்வூதியதாரர்கள் விவகாரத்தில் தற்போதைய சட்டங்களை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஓய்வூதியதாரர்களின் ஆயுள் சான்றிதழில் சம்பந்தப்பட்ட அதிகாரி முறையாக கையெழுத்து போட்டிருந்தால், அதை கொடுக்க நேரில் வரவேண்டும் என ஓய்வூதியதாரர்களையோ, அவர்களது உறவினர்களையோ தொந்தரவு செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories