December 5, 2025, 9:33 AM
26.3 C
Chennai

கரூர் துயரத்தில் எழுத்தாளர்கள் அரசியல் செய்யக் கூடாது! : ‘படைப்பாளர்கள் சங்கமம்’ கூட்டறிக்கை!

karur tvk meting vijay speech - 2025

கரூர் துயரத்தில் எழுத்தாளர்கள் அரசியல் செய்யக் கூடாது! ‘படைப்பாளர்கள் சங்கமம்’ கூட்டறிக்கை

41 உயிர்களை பலிகொண்ட கரூர் துயரம் தொடர்பாக  எழுத்தாளர்கள்  எவரும்  அரசியல்  செய்யக் கூடாது என்று  ‘படைப்பாளர்கள்  சங்கமம்’  கூட்டறிக்கை  வெளியிட்டுள்ளது.  அந்த அறிக்கை:

கடந்த 2025, செப். 27ஆம் தேதி, ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் தலைவரும் நடிகருமான நடிகர் விஜயின் பிரசாரப் பயணம் கரூர் வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில்  41 பேர் பலியாகினர். இது தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது. கரூரில் பலியானோருக்கு  ‘படைப்பாளர்கள் சங்கமம்’ சார்பில் அஞ்சலி செலுத்துகிறோம்.

இந்த நிகழ்வு விபத்தா,  சதியா என்ற கோணத்தில் விவாதங்கள் தற்போது நடந்து வருகின்றன. இது தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையத்தை மாநில அரசு அமைத்திருக்கிறது. அவரும் தனது விசாரணையைத் தொடங்கிவிட்டார். தவிர கரூர் மாவட்ட காவல் துறையும் தேவையான புலன் விசாரணையை நடத்தி வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பினர் தொடர்ந்த நீதிமன்ற வழக்குகளும் விசாரணையில் உள்ளன.

இந்த நிலையில்தான்,  ‘கலை இலக்கியவாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள்’ என்ற பெயரில் 2025 அக். 2ஆம் தேதி கூட்டறிக்கை ஒன்றை சிலர் வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கை, கரூர் கொடிய நிகழ்வுக்கு நடிகர் விஜய் தரப்பு மட்டுமே காரணம் என்று தெரிவித்திருக்கிறது. விஜய் ரசிகர்களின் கட்டுப்பாடற்ற தன்மை கண்டிக்கத் தக்கதே.

போதிய முன்னேற்பாடுகளைச் செய்யாதது, கூட்டத்தை நிர்வகிக்கத் தெரியாதது,  நடிகர் என்ற பிராபல்யத்தை முறையாகப் பயன்படுத்தாதது, பொறுப்பின்மை ஆகியவை த.வெ.க. கட்சியின் தவறுகள். குறிப்பாக, நடிகர் விஜய் பொறுப்புள்ள அரசியல் தலைவராக நடந்து கொள்ளவில்லை என்பதை நாம் கண்டித்தாக வேண்டும். 

ஆனால், கரூர் துயர நிகழ்விற்கு விஜய் தரப்பு மட்டுமே காரணம் அல்ல என்பதை தமிழகத்தில் உள்ள பெரும்பாலோர் அறிந்தே உள்ளனர். தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாதது, குறுகிய இடத்தில் அனுமதி அளித்து  அரசியல் நோக்குடன் செயல்பட்டது ஆகியவை  மாநில அரசின் தவறுகள். 

மேலும், கண்மூடித்தனமாகக் கூடி  நெரிசலை ஏற்படுத்திய கட்டுப்பாடற்ற ரசிகர்கள் மற்றும் சினிமா மோகம் கொண்ட மக்களுக்கும் இதில் இணையான பொறுப்பு உண்டு. 

இந்த மூன்று தரப்பினரும் நடந்த துயரத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பதே பொதுவான கருத்து. இதனையே நாமும் வலியுறுத்துகிறோம்.

ஆனால், ‘கலை இலக்கியவாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள்’ என்ற பெயரில் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளவர்கள், மாநில அரசின் தவறுகள் வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதையே நோக்கமாகக் கொண்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். 

இதில் கையொப்பமிட்டுள்ள அனைவருமே திமுக, கம்யூனிஸ்ட் ஆதரவு நிலைப்பாடுகளைக் கொண்டவர்கள். தங்கள் கூட்டறிக்கையை திமுக ஆதரவு எழுத்தாளர்கள் என்ற பெயரில் இவர்கள் வெளியிட்டிருந்தால் யாரும் பொருட்படுத்தப் போவதில்லை. ஆனால், தாங்கள்தான் ஒட்டுமொத்த தமிழக எழுத்தாளர்களின் பிரதிநிதிகள் போன்ற தோற்றத்தை இவர்கள் உருவாக்குவதை ஏற்க முடியாது. 

இலக்கியம், கலை மற்றும் எழுத்துலகில்  ‘தாதா’ மனநிலையுடன் சிலர் செயல்படுவதையும், தங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு உதவுவதற்காக கூட்டறிக்கை வெளியிடுவதையும், நடுநிலையான படைப்பாளர்களால் ஏற்க முடியாது.

இந்தக் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டிருப்பவர்களில் பெரும்பாலோர், இந்திய அரசின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது இந்தியாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டவர்கள் என்பதையும் நாம் மறந்துவிட  இயலாது.  

நாட்டுநலனோ, மக்கள் மீதான நேசமோ இன்றி கூட்டறிக்கை வெளியிட்ட இந்தக் குறுங்குழுவை அன்றே ‘படைப்பாளர்கள் சங்கமம்’ சார்பில் கண்டித்தோம். இவர்களின் இயல்பிலேயே ஒருசார்புத் தன்மையும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான சிந்தனைகளும் இருக்கின்றன. எனவேதான், தற்போது இந்தக் குழுவினர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையின் தேவை என்னவென்று ஆராய வேண்டியிருக்கிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் அக். 3ஆம் தேதி விசாரணை நடைபெற்றுள்ளது. அப்போது நீதிமன்றம் இரு தரப்புக்கும்  முக்கியமான கேள்விகளை எழுப்பி, சில உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் செல்லும் வாய்ப்பும் உண்டு. 

இந்தத் தருணத்தில்,  பொதுக்கருத்து உருவாக்கம் மூலமான நிர்பந்தத்தை நீதித்துறை, தனிநபர் விசாரணை ஆணையம், காவல்துறை ஆகியோர் மீது  அளிப்பதற்காகவே, திமுக, கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் இந்தக் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனரோ என்று சந்தேகிக்கிறோம். இது குற்றம் தொடர்பான விசாரணை நடைமுறையைப் பாதிக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

எழுத்தாளர்களும் கலைஞர்களும், சமூகத்தின் மனசாட்சியாகவும் அரசுக்கு உண்மையை எடுத்துக் கூறும் துணிவுள்ளவர்களாகவும் இருக்க வேண்டுமே ஒழிய, அரசின் தவறுகளை நியாயப்படுத்துபவர்களாக இருந்துவிடக் கூடாது. 

எனவே, ‘கலை இலக்கியவாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள்’ என்ற பெயரில், தமிழகத்தை ஆளும் அரசியல் கட்சிக்கும் மாநில அரசுக்கும் ஆதரவாக வெளியிடப்பட்டுள்ள இந்தக் கூட்டறிக்கையை உரிய கண்டனத்துடன் நிராகரிக்கிறோம். தமிழகத்தில் உள்ள அனைத்து எழுத்தாளர்களும் கலைஞர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் இந்தக் குறுங்குழுவின்  நிலைப்பாட்டை ஏற்கவில்லை என்பதை  ‘படைப்பாளர்கள் சங்கமம்’ சார்பில் தெளிவுபடுத்துகிறோம். 

கரூர்த் துயரம் தொடர்பாக நியாயமான விசாரணைகள் நடைபெற வேண்டும்; குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும்; இதுபோன்ற விவகாரங்களுக்கு நிலையான தீர்வு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.  

-தமிழக நலனில் அக்கறையுடன்…

  1. ‘திராவிட மாயை’ சுப்பு, சென்னை
  2. இசைக்கவி ரமணன், சென்னை
  3. கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், சென்னை
  4. பேராசிரியர் ப.கனகசபாபதி, கோவை
  5. கே.எஸ்.ராதாகிருஷ்ணன், சென்னை
  6. எஸ்.ஆர்.சுப்ரமணியம், ஈரோடு
  7. கவிஞர் ரவி சுப்பிரமணியன், சென்னை
  8. கவிஞர் பெ.சிதம்பரநாதன், கோவை
  9. கவிஞர் லட்சுமி மணிவண்ணன், நாகர்கோவில்
  10. பத்ரி சேஷாத்ரி, சென்னை
  11. மோகன் ஜி ஷத்ரியன், சென்னை
  12. பி.டி.டி.ராஜன், சென்னை
  13. இயகோகா சுப்பிரமணியம், கோவை
  14. அர்ஜுன் சம்பத், கோவை
  15. பேராசிரியர் உமையொருபாகன், நாகர்கோவில்
  16. வானவில் க.ரவி, சென்னை
  17. எஸ்.கே.கார்வேந்தன், தாராபுரம்
  18. பா.பிரபாகர், சென்னை
  19. ம.வெங்கடேசன், சென்னை
  20. என்.சி.மோகன்தாஸ், சென்னை
  21. டாக்டர் சீனிவாசகண்ணன், நாகர்கோவில்
  22. பத்மன், சென்னை
  23. நம்பிநாராயணன், சென்னை
  24. வ.மு.முரளி, திருப்பூர்
  25. ஹேமா கோபாலன், சென்னை
  26. மீனாட்சி ஸ்ரீதர், சென்னை
  27. ஜவஹர் வெங்கடசாமி, சென்னை
  28. பாஸ்கர் சுப்பிரமணியம், சென்னை
  29. ஒமாம்புலியூர் ஜெயராமன், சென்னை
  30. ஜெயகிருஷ்ணன் கோபால், சென்னை
  31. ஆமருவி தேவநாதன், சென்னை
  32. செங்கோட்டை ஸ்ரீராம், சென்னை
  33. சந்திர.பிரவீண்குமார், சென்னை
  34. ஹரன் பிரசன்னா, சென்னை
  35. ஜடாயு, பெங்களூரு
  36. பி.ஆர்.மகாதேவன், சென்னை
  37. சத்தியப்பிரியன், சேலம்
  38. எஸ்.ஜி.சூர்யா, சென்னை
  39. கோதை ஜோதிலட்சுமி, சென்னை
  40. பி.வெங்கடாசலபதி, திருநெல்வேலி
  41. முனைவர் காயத்ரி சுரேஷ், சென்னை
  42. அருட்செல்வப்பேரரசன், திருவொற்றியூர்
  43. கவிஞர் சுரேஜமீ, சென்னை
  44. கவிஞர் உமாபாரதி, சென்னை
  45. கவிஞர் பாபு பிரித்திவிராஜ், நாகர்கோவில்
  46. கவிஞர் சுதே.கண்ணன், நாகர்கோவில்
  47. கவிஞர் அமுல்ராஜ், திருவண்ணாமலை
  48. கவிஞர் மீரா வில்வம், மும்பை
  49. கவிஞர் லட்சுமி சாஹம்பரி, பெங்களூரு
  50. கவிஞர் திருமலைக்கண்ணன், ஸ்ரீரங்கம்
  51. கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம், திருப்பூர்
  52. கவிஞர் சிவதாசன், திருப்பூர்
  53. கோவிந்தராஜ், திருப்பூர்
  54. விசாலி கிருஷ்ணன், சென்னை
  55. கமலநாதன். சென்னை
  56. கவிஞர் பால்முகில், சென்னை
  57. கவிஞர் துரைசிங், கன்னியாகுமரி
  58. கவிஞர் இயற்கை, செஞ்சி
  59. கவிஞர் நந்தலாலா, சென்னை
  60. கவிஞர் சுராகி, திருவொற்றியூர்
  61. கவிஞர் மீ.விஸ்வநாதன், சென்னை
  62. கவிஞர் விவேக்பாரதி, சென்னை
  63. கவிஞர் எஸ்.சுவாதி, சென்னை
  64. கவிஞர் தில்லைவேந்தன், சென்னை
  65. கவிஞர் ஹரிஹரன், சென்னை
  66. கவிஞர் முரளிகிருஷ்ணா, சென்னை
  67. கவிஞர் விஜயகிருஷ்ணன், சென்னை
  68. கலைச்செல்வி ஸ்ரீநிவாஸ், சென்னை
  69. வழக்கறிஞர் எம்.விஜயா, சென்னை
  70. ராதா எஸ்.தேவர், சென்னை
  71. ராமசுப்பிரமணியன், சென்னை
  72. ராகவேந்திரா, சென்னை
  73. நடராஜ சாஸ்திரி, சென்னை
  74. ஜனனி ரமேஷ், சென்னை
  75. முனைவர் செ.ஜகந்நாத், மதுரை
  76. சோ.விபின்ராஜ், கன்னியாகுமரி
  77. ஜா.விநாயகமூர்த்தி, விழுப்புரம்
  78. அசோக்ராஜ், கும்பகோணம்
  79. சே.வெங்கடேசன், திருவண்ணாமலை
  80. பத்மா சந்திரசேகர், சென்னை
  81. பொன்.மூர்த்திகன், பறங்கிப்பேட்டை
  82. நிழலி, பெரம்பலூர்
  83. பாவலர் கா.நேசன், திருகளப்பூர்
  84. ச.மோகன், பெரம்பலூர்
  85. தேவரசிகன், கும்பகோணம்
  86. ஜி.பி.இளங்கோவன், கும்பகோணம்
  87. மா.செல்வகுமார், கல்லூர், கும்பகோணம்
  88. கே.மணிமாறன், சென்னை
  89. திருமை பா.ஸ்ரீதரன், சென்னை
  90. பி.வீரராகவன், சென்னை
  91. பேராசிரியர் ஜோஸபின்மேரி, பாளையங்கோட்டை
  92. பேராசிரியர் பாலசுப்பிரமணியம், திருநெல்வேலி
  93. வி.வி.பாலா, சென்னை
  94. விதூஷ், சென்னை
  95. கே.ஜி.ஜவர்லால், சென்னை
  96. முனைவர் சடகோபன், சென்னை
  97. முனைவர் தர்மசேனன், சென்னை
  98. சக்திவேல் ராஜகுமார், சென்னை
  99. ஜெயந்தி நாகராஜன், சென்னை
  100. கே.கந்தசாமி, கோவை
  101. புதுகை பாரதி, புதுக்கோட்டை
  102. தசரத் ஷா, காஞ்சிபுரம்
  103. அருண்பிரபு, சென்னை
  104. ஆனந்த்பிரசாத், சென்னை
  105. துக்ளக் சத்யா, சென்னை
  106. ஆர்.ராமமூர்த்தி, சென்னை
  107. குமரேசன், சென்னை
  108. திவாகர், சென்னை
  109. தேவப்பிரியா, சென்னை
  110. ஆண்டனி, சென்னை
  111. அரவிந்தா நாஞ்சில், சென்னை

மற்றும் பலர் (200க்கு மேற்பட்டோர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories