நீதிபதியுடன் அரசியல் செய்து, திமுக., தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளது!

karur bjp senthil nathan kp ramalingam - 2026

ஜாதி மத பேதமற்ற ஆட்சி அமைப்போம் என உறுதிமொழி ஏற்றவர்கள்,நீதிபதி மீது ஜாதியை திணிப்பது எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? என்று, முன்னாள் எம்பி ராமலிங்கம் கரூரில் கேள்வி எழுப்பினார்.

கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் கரூருக்கு வருகை தர உள்ள கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் -க்கு வரவேற்பு அளிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் மாநில துணைத்தலைவரும் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான முன்னாள் எம்பி ராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

ஆலோசனைக் கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த ராமலிங்கம், தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தலைப்பில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் அடிப்படையில் வருகிற 22 ஆம் தேதி கரூருக்கு வருகை தரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது மற்றும் நிகழ்ச்சியை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதே போல ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் உள்ள நிர்வாகிகளை அழைத்து சட்டமன்ற மாநாடுகள் 234 தொகுதிகளிலும் நடைபெற உள்ளது. இதே போல கரூரில் உள்ள நான்கு சட்ட மன்ற தொகுதிகளிலும் வருகிற 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதியை குறை சொல்வது என்பது தங்களது தலையில் தானே மண் அள்ளி போட்டுக் கொள்வதற்கு சமமாகும், திமுகவினருக்கு ஆட்சியை விட்டு போகப் போகிறோம். என்ற பயமும் இயலாமையால் நடத்துகின்ற நாடகம், இனி வரப்போக இருக்கிற வழக்குகளிலும் தங்களுக்கு இது போன்ற நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் நீதிபதிகளை மிரட்ட ஆரம்பித்துள்ளனர்.

இதற்கு நீதிபதிகள் தான் சரியான தீர்வு காண வேண்டும். இன்று சுவாமிநாதன் என்ற தனி நீதிபதிக்கு ஏற்பட்ட நிலையாக கருதி விடாமல், தமிழ்நாட்டில் உள்ள அத்தனை நீதிமன்ற நீதிபதிகளும் உணர வேண்டும் என்றார்.

மேலும், நீதிபதியை ஜாதியின் பெயரால் அவமதிப்பு செய்யக்கூடாது என்றும், ஜாதி மத பேதமற்ற ஆட்சி அமைப்போம் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டவர்கள் எப்படி ஒரு நீதிபதியை ஜாதியின் பெயரை பெயரைப் பயன்படுத்தி ஸ்டாலின் கூறலாமா? எனவும், இந்தக் கேள்வி நாடு முழுவதும் தற்போது திரும்பி கொண்டு உள்ளது. ஆகையால் இப்படிப்பட்ட கேவலமான ஒரு ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்பதற்காகத்தான் எங்களது மாநில தலைவர் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார் என தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Topics

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

Entertainment News

Popular Categories