நீதிபதியுடன் அரசியல் செய்து, திமுக., தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளது!

karur bjp senthil nathan kp ramalingam - 2026

ஜாதி மத பேதமற்ற ஆட்சி அமைப்போம் என உறுதிமொழி ஏற்றவர்கள்,நீதிபதி மீது ஜாதியை திணிப்பது எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? என்று, முன்னாள் எம்பி ராமலிங்கம் கரூரில் கேள்வி எழுப்பினார்.

கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் கரூருக்கு வருகை தர உள்ள கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் -க்கு வரவேற்பு அளிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் மாநில துணைத்தலைவரும் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான முன்னாள் எம்பி ராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

ஆலோசனைக் கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த ராமலிங்கம், தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தலைப்பில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் அடிப்படையில் வருகிற 22 ஆம் தேதி கரூருக்கு வருகை தரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது மற்றும் நிகழ்ச்சியை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதே போல ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் உள்ள நிர்வாகிகளை அழைத்து சட்டமன்ற மாநாடுகள் 234 தொகுதிகளிலும் நடைபெற உள்ளது. இதே போல கரூரில் உள்ள நான்கு சட்ட மன்ற தொகுதிகளிலும் வருகிற 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது” என்று தெரிவித்தார்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

தொடர்ந்து பேசிய அவர், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதியை குறை சொல்வது என்பது தங்களது தலையில் தானே மண் அள்ளி போட்டுக் கொள்வதற்கு சமமாகும், திமுகவினருக்கு ஆட்சியை விட்டு போகப் போகிறோம். என்ற பயமும் இயலாமையால் நடத்துகின்ற நாடகம், இனி வரப்போக இருக்கிற வழக்குகளிலும் தங்களுக்கு இது போன்ற நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் நீதிபதிகளை மிரட்ட ஆரம்பித்துள்ளனர்.

இதற்கு நீதிபதிகள் தான் சரியான தீர்வு காண வேண்டும். இன்று சுவாமிநாதன் என்ற தனி நீதிபதிக்கு ஏற்பட்ட நிலையாக கருதி விடாமல், தமிழ்நாட்டில் உள்ள அத்தனை நீதிமன்ற நீதிபதிகளும் உணர வேண்டும் என்றார்.

மேலும், நீதிபதியை ஜாதியின் பெயரால் அவமதிப்பு செய்யக்கூடாது என்றும், ஜாதி மத பேதமற்ற ஆட்சி அமைப்போம் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டவர்கள் எப்படி ஒரு நீதிபதியை ஜாதியின் பெயரை பெயரைப் பயன்படுத்தி ஸ்டாலின் கூறலாமா? எனவும், இந்தக் கேள்வி நாடு முழுவதும் தற்போது திரும்பி கொண்டு உள்ளது. ஆகையால் இப்படிப்பட்ட கேவலமான ஒரு ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்பதற்காகத்தான் எங்களது மாநில தலைவர் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார் என தெரிவித்தார்.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories