நீதிபதியுடன் அரசியல் செய்து, திமுக., தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளது!

karur bjp senthil nathan kp ramalingam - 2026

ஜாதி மத பேதமற்ற ஆட்சி அமைப்போம் என உறுதிமொழி ஏற்றவர்கள்,நீதிபதி மீது ஜாதியை திணிப்பது எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? என்று, முன்னாள் எம்பி ராமலிங்கம் கரூரில் கேள்வி எழுப்பினார்.

கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் கரூருக்கு வருகை தர உள்ள கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் -க்கு வரவேற்பு அளிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் மாநில துணைத்தலைவரும் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான முன்னாள் எம்பி ராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

ஆலோசனைக் கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த ராமலிங்கம், தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தலைப்பில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் அடிப்படையில் வருகிற 22 ஆம் தேதி கரூருக்கு வருகை தரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது மற்றும் நிகழ்ச்சியை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதே போல ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் உள்ள நிர்வாகிகளை அழைத்து சட்டமன்ற மாநாடுகள் 234 தொகுதிகளிலும் நடைபெற உள்ளது. இதே போல கரூரில் உள்ள நான்கு சட்ட மன்ற தொகுதிகளிலும் வருகிற 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதியை குறை சொல்வது என்பது தங்களது தலையில் தானே மண் அள்ளி போட்டுக் கொள்வதற்கு சமமாகும், திமுகவினருக்கு ஆட்சியை விட்டு போகப் போகிறோம். என்ற பயமும் இயலாமையால் நடத்துகின்ற நாடகம், இனி வரப்போக இருக்கிற வழக்குகளிலும் தங்களுக்கு இது போன்ற நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் நீதிபதிகளை மிரட்ட ஆரம்பித்துள்ளனர்.

இதற்கு நீதிபதிகள் தான் சரியான தீர்வு காண வேண்டும். இன்று சுவாமிநாதன் என்ற தனி நீதிபதிக்கு ஏற்பட்ட நிலையாக கருதி விடாமல், தமிழ்நாட்டில் உள்ள அத்தனை நீதிமன்ற நீதிபதிகளும் உணர வேண்டும் என்றார்.

மேலும், நீதிபதியை ஜாதியின் பெயரால் அவமதிப்பு செய்யக்கூடாது என்றும், ஜாதி மத பேதமற்ற ஆட்சி அமைப்போம் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டவர்கள் எப்படி ஒரு நீதிபதியை ஜாதியின் பெயரை பெயரைப் பயன்படுத்தி ஸ்டாலின் கூறலாமா? எனவும், இந்தக் கேள்வி நாடு முழுவதும் தற்போது திரும்பி கொண்டு உள்ளது. ஆகையால் இப்படிப்பட்ட கேவலமான ஒரு ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்பதற்காகத்தான் எங்களது மாநில தலைவர் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார் என தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

Topics

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

பஞ்சாங்கம் மார்ச் 10 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

T20 WC 2026: வெற்றிக் கோப்பையும்; விறுவிறுப்பு நிமிடங்களும்!

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி இறுதி ஆட்டம் 08.03.2026 அதிரடி வெற்றி – கோப்பையை வென்ற இந்திய அணி

மீண்டும் உலக சாம்பியன் இந்தியா! நியூஸி,, க்கு எதிராக சூப்பர் வெற்றி

பும்ரா அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Entertainment News

Popular Categories