நீதியரசர்களுக்கு மிரட்டல்; நீதித் துறையை இழிவுபடுத்தும் திமுக.,!

kadeswara subramaniam hindu munnani - 2026

நீதியரசர்களுக்கு மிரட்டல் விடுக்கும் நோக்கமா? நீதித்துறையை இழிவுபடுத்தும் திமுக.,வை இந்துமுன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது என்று அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது…

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் வழக்கில் தீர்ப்பு கூறிய காரணத்திற்காக நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் மீது திமுகவும் காங்கிரஸ் கட்சியும் பாராளுமன்றத்தில் பதவி நீக்கத் (இம்பீச்மென்ட்) தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

நீதிபதி மீது வீண் பழி சுமத்தி பதவி விலக்க வைக்க சதி செய்கிறது. இந்த இரு கட்சிகளும் இந்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை இதன்மூலம் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது. இத்தகைய நிலைப்பாடு இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும்.

நீதிபதி மீதான குற்றச்சாட்டு ஒரு தீர்ப்புக்காக பாராளுமன்றத்தில் கொண்டு வருவது இதுவே முதல்முறை. இது நீதித்துறை மீதான தாக்குதல் மட்டுமல்ல, நீதிபதிகளை மிரட்டும் போக்கு என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் தீபம் ஏற்றும் தீர்ப்பை மதிக்காமல் காவல்துறையும், மாவட்ட கலெக்டர் உள்பட அரசு நிர்வாகமும் சட்டத்திற்கு விரோதமாக நடந்து கொண்டது. நீதிமன்றத் தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்யலாம். ஆனால் உயர்நீதிமன்றத் தீர்ப்பை மறுப்பதற்கு மாநில அரசுக்கோ, காவல்துறைக்கோ எந்த அதிகாரமும் இல்லை. அதையும் பொதுவெளியில் காவல்துறை அதிகாரி பேசியது அதிகார துஷ்பிரயோகமாகும்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல நீதிமன்ற தீர்ப்புகளை நடைமுறைபடுத்த வில்லை. இத்தகைய போக்கு கவலைக்குறியதும், கவனத்திற்குரியதும் ஆகும்.

திமுக, காங்கிரஸ் கொண்டு வந்துள்ள தீர்மானம் பாராளுமன்றத்தில் வெற்றி பெறாது என்றாலும், அவதூறு பரப்ப இதனை வாய்ப்பாக பயன்படுத்துவதை ஏற்க முடியாது.

தீர்ப்பின் மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் போது அந்தத் தீர்ப்பை அளித்த நீதிபதியை விமர்சனம் செய்ய அனுமதிக்கக்கூடாது. இது நீதித்துறையை மிரட்டி பணிய வைக்கும் சதி ஆகும்.

பாராளுமன்றத்தில் திமுக கொண்டு வந்துள்ள பிரேரணையை சபாநாயகர் நிராகரிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம். திமுகவும், காங்கிரசும் நீதிமன்றத்தீர்ப்பை அவமதித்ததுடன், நாட்டு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.

மேலும் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது இந்துக்களின் உரிமை. இதற்கு எதிராக திமுக மற்றும் காங்கிரஸ் உட்பட தமிழக எம்பிக்கள் செயல்படுவது தமிழகத்திற்கு செய்யும் துரோகம்.
எனவே பாராளுமன்றத்தில் கொண்டு வந்துள்ள நீதிபதிக்கு எதிரான தீர்மானத்தை அனைத்து எம்பிக்களும் ஒன்றுபட்டு தோற்கடிக்க வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்து செயல்படும் தமிழக அரசை மக்கள் கண்டிக்க வேண்டும்.

இந்துக்களுக்கு எதிரான எம்பிக்கள் மற்றும் கட்சிகளை வருகின்ற தேர்தலில் தோற்கடித்து ஜனநாயக வழியில் பாடம் புகட்டுவோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

Topics

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

பஞ்சாங்கம் மார்ச் 10 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

T20 WC 2026: வெற்றிக் கோப்பையும்; விறுவிறுப்பு நிமிடங்களும்!

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி இறுதி ஆட்டம் 08.03.2026 அதிரடி வெற்றி – கோப்பையை வென்ற இந்திய அணி

மீண்டும் உலக சாம்பியன் இந்தியா! நியூஸி,, க்கு எதிராக சூப்பர் வெற்றி

பும்ரா அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Entertainment News

Popular Categories