December 11, 2025, 12:21 PM
29.2 C
Chennai

நீதியரசர்களுக்கு மிரட்டல்; நீதித் துறையை இழிவுபடுத்தும் திமுக.,!

kadeswara subramaniam hindu munnani - 2025

நீதியரசர்களுக்கு மிரட்டல் விடுக்கும் நோக்கமா? நீதித்துறையை இழிவுபடுத்தும் திமுக.,வை இந்துமுன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது என்று அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது…

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் வழக்கில் தீர்ப்பு கூறிய காரணத்திற்காக நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் மீது திமுகவும் காங்கிரஸ் கட்சியும் பாராளுமன்றத்தில் பதவி நீக்கத் (இம்பீச்மென்ட்) தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

நீதிபதி மீது வீண் பழி சுமத்தி பதவி விலக்க வைக்க சதி செய்கிறது. இந்த இரு கட்சிகளும் இந்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை இதன்மூலம் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது. இத்தகைய நிலைப்பாடு இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும்.

நீதிபதி மீதான குற்றச்சாட்டு ஒரு தீர்ப்புக்காக பாராளுமன்றத்தில் கொண்டு வருவது இதுவே முதல்முறை. இது நீதித்துறை மீதான தாக்குதல் மட்டுமல்ல, நீதிபதிகளை மிரட்டும் போக்கு என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் தீபம் ஏற்றும் தீர்ப்பை மதிக்காமல் காவல்துறையும், மாவட்ட கலெக்டர் உள்பட அரசு நிர்வாகமும் சட்டத்திற்கு விரோதமாக நடந்து கொண்டது. நீதிமன்றத் தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்யலாம். ஆனால் உயர்நீதிமன்றத் தீர்ப்பை மறுப்பதற்கு மாநில அரசுக்கோ, காவல்துறைக்கோ எந்த அதிகாரமும் இல்லை. அதையும் பொதுவெளியில் காவல்துறை அதிகாரி பேசியது அதிகார துஷ்பிரயோகமாகும்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல நீதிமன்ற தீர்ப்புகளை நடைமுறைபடுத்த வில்லை. இத்தகைய போக்கு கவலைக்குறியதும், கவனத்திற்குரியதும் ஆகும்.

திமுக, காங்கிரஸ் கொண்டு வந்துள்ள தீர்மானம் பாராளுமன்றத்தில் வெற்றி பெறாது என்றாலும், அவதூறு பரப்ப இதனை வாய்ப்பாக பயன்படுத்துவதை ஏற்க முடியாது.

தீர்ப்பின் மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் போது அந்தத் தீர்ப்பை அளித்த நீதிபதியை விமர்சனம் செய்ய அனுமதிக்கக்கூடாது. இது நீதித்துறையை மிரட்டி பணிய வைக்கும் சதி ஆகும்.

பாராளுமன்றத்தில் திமுக கொண்டு வந்துள்ள பிரேரணையை சபாநாயகர் நிராகரிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம். திமுகவும், காங்கிரசும் நீதிமன்றத்தீர்ப்பை அவமதித்ததுடன், நாட்டு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.

மேலும் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது இந்துக்களின் உரிமை. இதற்கு எதிராக திமுக மற்றும் காங்கிரஸ் உட்பட தமிழக எம்பிக்கள் செயல்படுவது தமிழகத்திற்கு செய்யும் துரோகம்.
எனவே பாராளுமன்றத்தில் கொண்டு வந்துள்ள நீதிபதிக்கு எதிரான தீர்மானத்தை அனைத்து எம்பிக்களும் ஒன்றுபட்டு தோற்கடிக்க வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்து செயல்படும் தமிழக அரசை மக்கள் கண்டிக்க வேண்டும்.

இந்துக்களுக்கு எதிரான எம்பிக்கள் மற்றும் கட்சிகளை வருகின்ற தேர்தலில் தோற்கடித்து ஜனநாயக வழியில் பாடம் புகட்டுவோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

சபரிமலையில் ரோப் கார் சேவை; தேவஸ்வம் போர்டு திட்டம்!

கூட்டத்திற்குப் பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும்.

பஞ்சாங்கம் டிச.11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நீதிபதியுடன் அரசியல் செய்து, திமுக., தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளது!

ஜாதி மத பேதமற்ற ஆட்சி அமைப்போம் என உறுதிமொழி ஏற்றவர்கள்,நீதிபதி மீது...

Topics

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

சபரிமலையில் ரோப் கார் சேவை; தேவஸ்வம் போர்டு திட்டம்!

கூட்டத்திற்குப் பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும்.

பஞ்சாங்கம் டிச.11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நீதிபதியுடன் அரசியல் செய்து, திமுக., தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளது!

ஜாதி மத பேதமற்ற ஆட்சி அமைப்போம் என உறுதிமொழி ஏற்றவர்கள்,நீதிபதி மீது...

தமிழ் திறனறிதல் தேர்வு 2025ன் 100 சாதனையாளர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!

தமிழ்நாடு அரசு தமிழ் திறனறிதல் தேர்வு 2025ன் 100 சாதனையாளர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!

பஞ்சாங்கம் – டிச.10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

போலி தங்கக் காசுகளை குறைந்த விலைக்கு தருவதாகக் கூறி மோசடி; 4 பேர் கைது!

ராஜபாளையத்தில் தங்க காசுகளை குறைந்த விலைக்கு தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த மூதாட்டி உள்பட நான்கு முதியவர்கள் கைது!

Entertainment News

Popular Categories