போலி தங்கக் காசுகளை குறைந்த விலைக்கு தருவதாகக் கூறி மோசடி; 4 பேர் கைது!

rajapalayam gold selling case arrested - 2026

ராஜபாளையத்தில் தங்க காசுகளை குறைந்த விலைக்கு தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த மூதாட்டி உள்பட நான்கு முதியவர்கள் கைது!

தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் பகுதியை சேர்ந்த ராமர் என்பவர் சிலர் தன்னிடம் தங்க காசுகளை குறைந்த விலைக்கு தருவதாக கூறி 5 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு போலியான தங்க காசுகளை கொடுத்து ஏமாற்றி விட்டதாக கூறி கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

போலீசார் விசாரணை செய்தபோது குற்றம் நடந்த இடம் ராஜபாளையம் உட்கோட்ட பகுதியான முறம்பு என்ற பகுதி என்பதால் இந்த தகவல் ராஜபாளையம் டிஎஸ்பி பசிணா பிவி கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் சக்தி குழுவினர் நடத்திய தீவிர விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்ட காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சக்திவேலு (67) விழுப்புரம் மாவட்டம் திருக்கை கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் ( 60) இவரது மனைவி அரசாகி ( 56) சென்னையைச் சேர்ந்த சண்முகம்( 61) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு கிராம் மதிப்புள்ள 11 தங்க காசுகளும் ஏராளமான போலி தங்க காசுகளும் இரண்டு லட்ச ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டது.

ALSO READ:  சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

இதுகுறித்து டிஎஸ்பி பசினா பிவி யிடம் கேட்டபோது சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இவர்கள் குழுவாக சேர்ந்து ஏதாவது ஊரில் பொது இடங்களில் தங்கி கொண்டு கூலி வேலைக்கு செல்வது போல் நடித்து யாரையாவது ஒருவரை தேர்வு செய்து அவர்களிடம் தங்கள் கூலி வேலை செய்யும்போது பூமிக்கு அடியில் சில தங்க காசுகள் கிடைத்ததாகவும் அதை என்ன செய்வது என்று தெரியவில்லை எனவும் உண்மையிலேயே இது தங்க காசு தானா என்று சோதனை செய்து தந்து உதவுங்கள் என்று ஒரு ஒரிஜினல் தங்க காசை அவர்களிடம் கொடுப்பதும் அவர்கள் அதை சோதனை செய்து ஒரிஜினல் என்று தெரிந்தவுடன் இன்னும் சில காசுகள் உள்ளது குறைந்த விலை ஏதாவது தாருங்கள் கஷ்டத்தில் இருக்கிறோம் நாங்கள் மொத்த காசையும் கொடுத்து விடுகிறோம் என்று கூறி கிடைத்த பணத்துக்கு ஏற்றவாறு போலியான தங்கக் காசுகளை கொடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விடுகின்றனர்.

இதுபோல் இவர்கள் பல இடங்களில் செய்து பல லட்சங்களை சுருட்டிதாக தெரிகிறது எங்களுக்கு வந்த புகாரின் பேரில் விசாரணை செய்து கைது செய்து அவரிடம் இருந்த பொருட்களை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளோம் மேலும் இது குறித்து விசாரணை செய்து வருகிறோம் என்றார்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories