போலி தங்கக் காசுகளை குறைந்த விலைக்கு தருவதாகக் கூறி மோசடி; 4 பேர் கைது!

rajapalayam gold selling case arrested - 2026

ராஜபாளையத்தில் தங்க காசுகளை குறைந்த விலைக்கு தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த மூதாட்டி உள்பட நான்கு முதியவர்கள் கைது!

தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் பகுதியை சேர்ந்த ராமர் என்பவர் சிலர் தன்னிடம் தங்க காசுகளை குறைந்த விலைக்கு தருவதாக கூறி 5 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு போலியான தங்க காசுகளை கொடுத்து ஏமாற்றி விட்டதாக கூறி கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

போலீசார் விசாரணை செய்தபோது குற்றம் நடந்த இடம் ராஜபாளையம் உட்கோட்ட பகுதியான முறம்பு என்ற பகுதி என்பதால் இந்த தகவல் ராஜபாளையம் டிஎஸ்பி பசிணா பிவி கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் சக்தி குழுவினர் நடத்திய தீவிர விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்ட காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சக்திவேலு (67) விழுப்புரம் மாவட்டம் திருக்கை கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் ( 60) இவரது மனைவி அரசாகி ( 56) சென்னையைச் சேர்ந்த சண்முகம்( 61) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு கிராம் மதிப்புள்ள 11 தங்க காசுகளும் ஏராளமான போலி தங்க காசுகளும் இரண்டு லட்ச ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டது.

இதுகுறித்து டிஎஸ்பி பசினா பிவி யிடம் கேட்டபோது சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இவர்கள் குழுவாக சேர்ந்து ஏதாவது ஊரில் பொது இடங்களில் தங்கி கொண்டு கூலி வேலைக்கு செல்வது போல் நடித்து யாரையாவது ஒருவரை தேர்வு செய்து அவர்களிடம் தங்கள் கூலி வேலை செய்யும்போது பூமிக்கு அடியில் சில தங்க காசுகள் கிடைத்ததாகவும் அதை என்ன செய்வது என்று தெரியவில்லை எனவும் உண்மையிலேயே இது தங்க காசு தானா என்று சோதனை செய்து தந்து உதவுங்கள் என்று ஒரு ஒரிஜினல் தங்க காசை அவர்களிடம் கொடுப்பதும் அவர்கள் அதை சோதனை செய்து ஒரிஜினல் என்று தெரிந்தவுடன் இன்னும் சில காசுகள் உள்ளது குறைந்த விலை ஏதாவது தாருங்கள் கஷ்டத்தில் இருக்கிறோம் நாங்கள் மொத்த காசையும் கொடுத்து விடுகிறோம் என்று கூறி கிடைத்த பணத்துக்கு ஏற்றவாறு போலியான தங்கக் காசுகளை கொடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விடுகின்றனர்.

இதுபோல் இவர்கள் பல இடங்களில் செய்து பல லட்சங்களை சுருட்டிதாக தெரிகிறது எங்களுக்கு வந்த புகாரின் பேரில் விசாரணை செய்து கைது செய்து அவரிடம் இருந்த பொருட்களை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளோம் மேலும் இது குறித்து விசாரணை செய்து வருகிறோம் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 11 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராக ஞாயிறு இன்று பதவி ஏற்று இருக்கிறார் ஜோசப் விஜய். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில்

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

Topics

பஞ்சாங்கம் மே 11 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராக ஞாயிறு இன்று பதவி ஏற்று இருக்கிறார் ஜோசப் விஜய். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில்

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

Entertainment News

Popular Categories