spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்கரோனா வைரஸ்: வதந்திகளை வலை தளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை: மதுரை ஆட்சியர்!

கரோனா வைரஸ்: வதந்திகளை வலை தளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை: மதுரை ஆட்சியர்!

- Advertisement -

கரோனா வைரஸ் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புபவர்களை சைபர் கிரைம் போலீஸார் கண்காணித்து வருவதாக, மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நேற்று (மார்ச் 5) நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், மதுரை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் விமான நிலையத்தில் இதுவரை 15 ஆயிரத்து 432 பயணிகளுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

கரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புபவர்களை சைபர் கிரைம் போலீஸார் கண்காணித்து வருவதாகவும், தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

“மக்களுக்கு பயம் ஏற்படும் வகையில் தவறான செய்திகளை பரப்புபவர்களை சைபர் கிரைம் போலீஸார் மூலம் கண்காணிக்க ஏற்கெனவே அரசு அறிவுறுத்தியிருக்கிறது. அவ்வாறு தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe