ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசிப்பெருவிழாவில் பகல் பத்து ஐந்தாம் திருநாளான இன்று, அர்ஜுன மண்டபத்தில் நம்பெருமாள் பாண்டியன் கொண்டை அணிந்து எழுந்தருளினார்.
அரங்கனையன்றி மற்று தெய்வம் அறியா தொண்டரடிப்பொடி யாழ்வாரின் திருமாலை பாசுரத்திற்கு ஏற்ப, ரத்தின பாண்டியன் கொண்டை அணிந்து, ஸ்ரீரங்க விமானப் பதக்கம் (பெரியபெருமாள், நம்பெருமாள், உபய நாச்சிமார்கள், பரவாசுதேவர், விபீஷணன், துவார பாலகர்கள் என 8 திருமேனி பதிக்கப் பெற்றது) அடுக்குப் பதக்கங்கள், சிகப்புக்கல் அபய ஹஸ்தத்துடன், பச்சை வர்ண வஸ்திரம், 6 வட பெரிய முத்துச் சரம் சாற்றி, பின் சேவையாக – அண்டபேரண்ட பக்ஷி பதக்கம், புஜ கீர்த்தி கைகளில் சாற்றி, சேவை சாதித்தார்.
படங்கள்: Sriranga Arangam