ஜனநாயக போராட்டம் என்ற பெயரில் வன்முறையை தூண்டுவது சரியானதல்ல என இந்தி நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
தலைவி பட சூட்டிங்குக்காக ஐதராபாத்தில் இருக்கும் நடிகை கங்கனா ரனாவத், மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து, தன்னுடைய கருத்துக்களை பேட்டியாக அளித்திருக்கிறார்
அவர் கூறியிருப்பதாவது: குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக, வாய் திறக்காத பாலிவுட் நடிகர்கள் வெட்கப்பட வேண்டும்.
பாலிவுட்டில் அனைவரும் கோழைகள். அவர்கள், தினமும் இருபது முறை கண்ணாடியில் தங்களை பார்த்துக் கொள்வர். ஏதாவது கேட்டால், எங்களுக்கு அனைத்தும் கிடைக்கிறது; நாங்கள் எதற்காக நாட்டை பற்றி கவலைப்பட வேண்டும் என்பர். வேறு சிலர் இருக்கின்றனர். அவர்கள், நாங்களே கலைஞர்கள். நாங்கள் ஏன் நாட்டை பற்றி கவலைப்பட வேண்டும் என கேட்பர்.
அவர்களையெல்லாம் அழைத்து வந்து, குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து கருத்துச் சொல்ல வைக்க வேண்டும்.
நாட்டில், பசி பட்டினி போன்ற பல்வேறு பிரச்சனைகள் உள்ள நிலையில், ரயில், பேருந்து போன்றவற்றில் கற்களை வீசுவதும், அவற்றை எரித்து வன்முறையில் ஈடுபடுவது என்றைக்கும் தீர்வாகாது என்று கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும்போது, முதலில் நீங்கள் வன்முறையில் ஈடுபடாதீர்கள். எங்கள் மக்கள் தொகையில், 3-4% பிபிஎல் வரி செலுத்துகின்றன.
மற்றவர்கள் உண்மையில் அவர்களைச் சார்ந்து இருக்கிறார்கள். எனவே, பேருந்துகள், ரயில்கள் எரிக்க மற்றும் நாட்டில் முரட்டுத்தனத்தை உருவாக்குவதற்கான உரிமையை உங்களுக்கு யார் தருகிறார்கள்? என்றும் கேள்வி எழுப்பினார்.
சுதந்திரத்திற்காக நாம் போராடியது போல் தற்போது நாம் போராடுவது உகந்தது அல்ல என்றும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெறுவது குறித்து கங்கனா ரணாவத் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.