இந்த லட்சணத்துக்கு… மயிலை அறுபத்து மூவர் உற்ஸவத்தையே நடத்தியிருக்கலாம்..!

mylapore1
mylapore1

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது என்ற அச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப் பட்டு வருகின்றன. ஆனால் சமூக இடைவெளி என்பதையோ, பிறர் அருகே இடித்துக் கொண்டும் உரசிக் கொண்டும் நிற்கும் நேரம் இது அல்ல என்பதையோ மக்கள் இன்னமும் உணர்ந்தபாடில்லை.

மக்கள் அதிகம் கூடக்கூடாது, ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு, உரசியபடியோ வெகு அருகிலோ நின்று கொண்டிருந்தால் இந்த வைரஸ் எளிதில் அடுத்தவருக்கு தொற்றிக் கொள்ளும். எனவேதான், சமூக விலகலைக் கடைப்பிடிக்கவும், தற்காத்துக் கொள்ளவும் வீடுகளில் தனித்திருங்கள், வெளியில் வரவேண்டாம் என்றும் அரசு சுகாதாரத் துறை வலியுறுத்து கிறது.

mylapore2
mylapore2

ஆனால் இது எதற்காக என்பதையே உணராதவர்கள் போல், மக்கள் கூட்டம் கூட்டமாக கிடைக்கும் சிறிது நேரத்தை பயன்படுத்திக் கொள்ள முண்டியடிப்பது, சுகாதாரத் துறையின் நோக்கத்தையே சிதறடிப்பதாக அமைந்திருக்கிறது.

மக்கள் கூட்டத்தை சேர்க்கக் கூடாது என்பதற்காகத்தான் ஆலய வழிபாட்டில் தடை ஏற்படுத்தப்பட்டது. அதாவது ஒழுங்குமுறையுடன் கூடும் கூட்டம்தான்! ஆனால் ஆலயத்துக்கு வெளியே இடைவெளியின்றிக் கூடும் ஒழுங்குமுறையற்ற கூட்டத்தைப் பார்த்தால்… மயிலை அறுபத்து மூவர் உற்சவத்தையே நடத்திவிடலாம் என்றுதான் தோன்றுகிறது.

தமிழகத்தில் உள்ள 5 மாநகராட்சிகளில் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால், இன்று சந்தைகளில், காய்கறிக் கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். இதன் காரணமாக மக்கள் 4 நாட்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைக்க வேண்டும் என்பதால், சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் இன்று பிற்பகல் 3 வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

mylapore3
mylapore3

கொரோனா நோய்த் தொற்றுக்கு மருந்து கண்டறியப் படாத காரணத்தால், உலகமே இந்த நோய்த் தொற்று வராமல் தனித்திருத்தலே சிறந்தது என்ற முடிவுக்கு வந்திருக்கின்றது. தற்போதைய சூழலில், மக்கள் சமூக விலகலை பின்பற்றுவதே ஒரே தீர்வு என்று, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.

முழு ஊரடங்கு அறிவிப்பை அடுத்து கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் காய்கறிகள் வாங்க மக்கள் பெருமளவில் குவிந்தனர். மக்கள் இப்படி குவியக் கூடாது என்பதற்காகத்தான், தமிழகத்தில் அத்யாவசிய பொருட்கள் மக்களுக்கு சென்றடைய மாநகராட்சி சார்பில் ஆங்காங்கே தற்காலிக மார்க்கெட்டுகளும் ஏற்படுத்தப்பட்டன.

mylapore4
mylapore4

இருப்பினும், நாளை முதல் சென்னை, மதுரை, கோவை, திருப்பூர், சேலம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், 4 நாட்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைக்க வேண்டும் என்ற ஆவலில் பெருமளவில் மக்கள் குவிந்தனர். அதே நேரத்தில் சமூக விலகலை பின்பற்றாமல் அலட்சியமாக இருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories