இந்த லட்சணத்துக்கு… மயிலை அறுபத்து மூவர் உற்ஸவத்தையே நடத்தியிருக்கலாம்..!

mylapore1
mylapore1

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது என்ற அச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப் பட்டு வருகின்றன. ஆனால் சமூக இடைவெளி என்பதையோ, பிறர் அருகே இடித்துக் கொண்டும் உரசிக் கொண்டும் நிற்கும் நேரம் இது அல்ல என்பதையோ மக்கள் இன்னமும் உணர்ந்தபாடில்லை.

மக்கள் அதிகம் கூடக்கூடாது, ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு, உரசியபடியோ வெகு அருகிலோ நின்று கொண்டிருந்தால் இந்த வைரஸ் எளிதில் அடுத்தவருக்கு தொற்றிக் கொள்ளும். எனவேதான், சமூக விலகலைக் கடைப்பிடிக்கவும், தற்காத்துக் கொள்ளவும் வீடுகளில் தனித்திருங்கள், வெளியில் வரவேண்டாம் என்றும் அரசு சுகாதாரத் துறை வலியுறுத்து கிறது.

mylapore2
mylapore2

ஆனால் இது எதற்காக என்பதையே உணராதவர்கள் போல், மக்கள் கூட்டம் கூட்டமாக கிடைக்கும் சிறிது நேரத்தை பயன்படுத்திக் கொள்ள முண்டியடிப்பது, சுகாதாரத் துறையின் நோக்கத்தையே சிதறடிப்பதாக அமைந்திருக்கிறது.

மக்கள் கூட்டத்தை சேர்க்கக் கூடாது என்பதற்காகத்தான் ஆலய வழிபாட்டில் தடை ஏற்படுத்தப்பட்டது. அதாவது ஒழுங்குமுறையுடன் கூடும் கூட்டம்தான்! ஆனால் ஆலயத்துக்கு வெளியே இடைவெளியின்றிக் கூடும் ஒழுங்குமுறையற்ற கூட்டத்தைப் பார்த்தால்… மயிலை அறுபத்து மூவர் உற்சவத்தையே நடத்திவிடலாம் என்றுதான் தோன்றுகிறது.

தமிழகத்தில் உள்ள 5 மாநகராட்சிகளில் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால், இன்று சந்தைகளில், காய்கறிக் கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். இதன் காரணமாக மக்கள் 4 நாட்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைக்க வேண்டும் என்பதால், சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் இன்று பிற்பகல் 3 வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!
mylapore3
mylapore3

கொரோனா நோய்த் தொற்றுக்கு மருந்து கண்டறியப் படாத காரணத்தால், உலகமே இந்த நோய்த் தொற்று வராமல் தனித்திருத்தலே சிறந்தது என்ற முடிவுக்கு வந்திருக்கின்றது. தற்போதைய சூழலில், மக்கள் சமூக விலகலை பின்பற்றுவதே ஒரே தீர்வு என்று, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.

முழு ஊரடங்கு அறிவிப்பை அடுத்து கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் காய்கறிகள் வாங்க மக்கள் பெருமளவில் குவிந்தனர். மக்கள் இப்படி குவியக் கூடாது என்பதற்காகத்தான், தமிழகத்தில் அத்யாவசிய பொருட்கள் மக்களுக்கு சென்றடைய மாநகராட்சி சார்பில் ஆங்காங்கே தற்காலிக மார்க்கெட்டுகளும் ஏற்படுத்தப்பட்டன.

mylapore4
mylapore4

இருப்பினும், நாளை முதல் சென்னை, மதுரை, கோவை, திருப்பூர், சேலம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், 4 நாட்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைக்க வேண்டும் என்ற ஆவலில் பெருமளவில் மக்கள் குவிந்தனர். அதே நேரத்தில் சமூக விலகலை பின்பற்றாமல் அலட்சியமாக இருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Entertainment News

Popular Categories