மதுரை பள்ளிகளில் சர்வதேச யோகா தினம்!

madurai yoga day - 2026

சர்வதேச யோகா தினம்

மதுரை, எல்கேபி நகர் அரசுநடுநிலைப் பள்ளியில், சர்வதேச யோகா தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. உடற்கல்வி ஆசிரியர் சுகுமாறன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் ராஜ வடிவேல் வரவேற்றார்.

யோகா பயிற்றுநர்கள் கௌஸ் பாட்ஷா, மீனாட்சி, சாந்தி, ஜெயப்பிரியா, செந்தில் ஆகியோர் யோகா செய்யும் முறை, வகைகள், கிடைக்கும் பலன் ஆகியவை குறித்து எடுத்துரைத்தனர். மேலும், தடாசனம், உட்கட்டாசனம், திரிகோண ஆசனம், பச்சிமுத்து ஆசனம், யோக முத்திரை ஆசனம், சூரிய நமஸ்காரம் முதலிய ஆசனங்களை செய்து காட்டி அதன் பலன்களை விளக்கினர்.

ஆசிரியை அனுசியா 2024 ஆம் ஆண்டின் கருப்பொருள் ‘சுய மற்றும் சமூகத்திற்கான யோகா’ எனக் கூறி நலவாழ்வு மற்றும் சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பதில் யோகாவின் பங்கினை விளக்கி கூறினார்.

மாணவி பைரோஸ்பானு நன்றி கூறினார். விழாவில், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, ஆசிரியைகள் விஜயலட்சுமி, மனோன்மணி, சித்ரா, அகிலா, அம்பிகா, சாந்தி ஆகியோர் செய்திருந்தனர்.

காரியாபட்டியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு இலவச பயிற்சி முகாம்

உலக யோகா தினத்தை முன்னிட்டு காரியாபட்டியில் யோக பயிற்சி முகாம் நடை பெற்றது. உலக யோகா தினம் ஜூன் 21ந்தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சிவானந்தா யோகாலயம் சார்பில் ,உலக யோகா தினத்தை முன்னிட்டு, இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சி முகாமினை, எஸ்.பி. எம். நிறுவன தலைவர் அழகர்சாமி தொடங்கி வைத்து பயிற்சி சாதனங்களை வழங்கினார்.

முகாமில், ஆசனம், பிரணாயாமம், தியானப் பயிற்சி போன்ற வகுப்புகள் நடைபெற்றது. முகாமில் , யோகா ஆசிரியர் ராமலிங்கம் பயிற்சி அளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories