தமிழக அரசின் தவறான செயல்பாட்டால் தடம் மாறிப் போகிறது தமிழகம்: இந்து முன்னணி கண்டனம்!

kallakkurichi illicit liquor case - 2026

தமிழனின் உயிர் மலிவு விலையா? தமிழக அரசின் தவறான செயல்பாட்டால் தடம் மாறி போகிறது தமிழகம் என்று குறிப்பிட்டு, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து, இந்து முன்னணி மாநில செயலாளர் மணலி த. மனோகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

தமிழகம் போதையில் தடுமாறும் நிலைக்கு டாஸ்மாக் தமிழர்களை சீரழித்தது. டாஸ்மாக் சரக்கில் விழுந்த தமிழன். விலை மலிவான போதை அதிகமாக, எதை வேண்டுமானாலும் நாடும் அவலநிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. இன்றைய இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி தங்கள் பொன்னான எதிர்காலத்தை இழந்து நடைபிணமாக வாழ்கிறார்கள். அதிலும் குறிப்பாக ஏழை எளிய மக்கள் தான் இதிலும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்பது வேதனையான உண்மை.

கடந்த வருடம் கள்ள சாராயம் அருந்தி இறந்தவர்களுக்கு அதிலும் அந்த விஷ சாராயத்தை விற்ற அயோக்கியனுக்கும் அரசு பத்து லட்சத்தை வாரி வழங்கியது. உண்மையில் இது மனிதாபிமான அடிப்படையில் என்பது சரி. ஆனால் இதனால் கள்ள சாராய விற்பனை, போதை பொருள் விற்பனை தான் ஊக்கம் பெற்றது.

தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ள சாராய சாவு ஏன்? என்று தமிழக அரசு சிந்தித்ததா? இல்லையா எனத் தெரியவில்லை? தமிழனின் உயிர் மலிவு விலையாகிபோனது.

இப்போதும் அரசு நல நிதி தரலாம். இதனை மனிதாபிமான அடிப்படையில் என ஊடகமும் அரசியல் கட்சிகளும் பசப்பலாம். இவை எல்லாம் மக்களின் கோபத்தை திசை திருப்ப நடக்கும் நாடகம்.

கள்ள சாராயம் எங்கு விற்றார்கள்? காவல்துறை, கள்ளக்குறிச்சி கோர்ட், கலெக்டர், அரசு அதிகாரிகள் அலுவலகத்திற்கு அருகிலேயே என கூறப்படுகிறது. இது உண்மையானால், இது எத்தகைய வெட்கக்கேடான விஷயம். மனித உயிர்கள் போன பின்பு நடவடிக்கை எடுப்பது என்பது கண்துடைப்பு நாடகம்.

இவர்களை போதையில் தள்ளியது யார்? நேற்று திமுக கொடியுடன் சென்னையில் சாலையின் நடுவில் போதையில் மட்டையான இளைஞன் காரில். இதுபற்றி திமுக வாயை திறந்ததா? முதல்வரும் திமுகவின் தலைவருமான ஸ்டாலின் அவர்களுக்கு இது தெரியுமா? அவரோ மர்மயோகி போல் ஆட்சி நடத்துகிறார் என்பதே மக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், உழைக்கும் இளைஞர்கள் இன்று பெருமளவில் போதைக்கு அடிமை ஆகிவிட்டார்கள் என்பது வேதனையான உண்மை.

இதற்கு முக்கிய காரணம் போதையை ஏற்றும் டாஸ்மாக் சரக்கில் ஆல்கஹால் அதிகம். அது குடிப்பவனை உடனே அது குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கும் என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். குடிக்கு அடிமையானவரால் குடிக்காமல் இருக்கமுடியாத நிலையை ஏற்படுத்துகிறது. டாஸ்மாக் கடையை நடத்துவது தமிழக அரசின் பணியா?

பீகாரிலும், குஜராத்திலும் மது வருமானம் இல்லாத ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் மீளமுடியாத அளவு போதையில் போகிறது. காரணம் மது ஆலைகளை நடத்துவது அரசியல்வாதிகள் அல்லது அவர்களின் பினாமிகள். இவர்களால் தமிழகம் சீரழிந்து வருகிறது.

இந்த அவல நிலையை போக்க மக்களின் நலனில் அக்கறை உள்ளவர்கள் போராட முன்வர வேண்டும். வருங்கால சமுதாயத்தை காப்பாற்ற போதை எனும் அரக்கனை ஒழிக்க வேண்டும்.

தமிழக அரசு டாஸ்மாக் விற்பனையை அதிகப்படுத்த சிந்திப்பதை நிறுத்தி, போதை மறுவாழ்வு இல்லங்களை மாவட்டம் தோறும் திறந்தாக வேண்டியது அவசியமாகிறது.

மீண்டும் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க வேண்டுமானால் முதலில் போதையில் வீழ்ந்தவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே கண்துடைப்பு நாடகம் நடத்துவது மட்டும் இதற்கு தீர்வு தராது.

எனவே முழுமையான போதை பொருள், கள்ள சாராயம் தடுப்பு நடவடிக்கை மற்றும் கண்காணிப்பை மாவட்டம் தோறும் ஏற்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

Entertainment News

Popular Categories