செங்கோட்டை வலுவிழந்த குளத்தின் கரை! எம்எல்ஏ கிருஷ்ண முரளி ஆய்வு!

krishna murarli
krishna murarli

முறையாகப் பராமரிக்கப்படாததால் செங்கோட்டை குளத்துக் கரை வலுவிழந்ததால் அருகேயுள்ள ஏ.கே.நகரில் குளத்து நீர் புகுந்தது. இதனால் இங்குள்ள குடியிருப்புகளை சூழ்ந்தது.

இதையடுத்து ஆய்வு நடத்திய கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, குளத்துக்கரையை முழுமையாக சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.

செங்கோட்டை நகரின் மத்தியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள செங்கோட்டை குளமானது, குண்டாறு அணையில் இருந்தது உபரியாக கிடைக்கப்பெறும் தண்ணீரால் நிரம்புவது வழக்கம்.

இக்குளத்தையொட்டி அமைந்துள்ள ஏகே நகரில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதனிடையே முறையாக பராமரிக்கப்படாததால் இக்குளத்தின் கரை வலுவிழந்தது.

இதனால் இங்கு பெருக்கெடுத்த நீர் அருகேயுள்ள ஏகேநகரில் புகுந்தது. இதனால் வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்கிநின்றது. இவ்வாறு தேங்கிநிற்கும் தண்ணீரில் கழிவுநீரும் சேரும் நிலையில் உருவாகும் கொசுக்களால் நோய்கள் பரவும் அபாயம் உருவானது.

கடந்த ஒரு மாதமாக இந்நிலை நீடிப்பதாக அப்பகுதி பொதுமக்கள் கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏ கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பாவிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து நடவடிக்கை மேற்கொண்ட கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, கள ஆய்வு நடத்தினார். பின்னர் அவர், இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேசி வலுவிழந்து காணப்படும் இந்த குளத்தின் கரையை முழுமையாக சீரமைக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.

ஆய்வின்போது அதிமுக மாவட்ட பொருளாளர் சண்முகையா, கந்தசாமி பாண்டியன், ஒன்றியச் செயலாளர்கள் ஆய்க்குடி செல்லப்பன், ராமச்சந்திரன், வசந்தம் முத்துபாண்டியன் கடையநல்லூர் நகரச் செயலாளர் முருகன், பேரூர் செயலாளர்கள் முத்தழகு, பாலசுப்பிரமணியன், சிறுபான்மை நலப்பிரிவு மாவட்ட இணைச்செயலாளர் ஞானராஜ், ஜாகீர் உசேன், கிட்டுராஜா, அருள்ராஜ், பூசைராஜ், ராஜா, கணேசன், சக்திவேல் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories