இந்தியா, பிரிட்டன், டென்மார்க் உள்பட 35-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் வைரசின் ‘பிஏ.2’ என்ற புதிய மாறுபாடு பரவியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஓமிக்ரானின் அசல் மாறுபாடான BA.1 விட, BA.2 துணை மாறுபாடு அதிகமாக பரவக்கூடியது என்று டென்மார்க்கில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஓமிக்ரானின் துணை மாறுபாடான BA.2 டென்மார்க்கில் தீவிரமாக பரவி வருகிறது.
இதனிடையே, டென்மார்க்கில் டிசம்பர் மற்றும் ஜனவரி இடையே 8,500 குடும்பங்களிடையே ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில், BA.1 உடன் ஒப்பிடும்போது, BA.2 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 33% அதிகமாக மற்றவர்களுக்கு தொற்றுவதைக் கண்டறிந்துள்ளனர்.
இந்த மாறுபாடு ஒமைக்ரான் வைரஸை விட அதிவேகமாக பரவக்கூடியது. இதனால், எதிர்காலத்தில் தீவிர பாதிப்பை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமிக்ரானின் அசல் மாறுபாடான BA.1 உலகளவில் 98% க்கும் அதிகமான பாதிப்புகளுக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது, ஆனால் டென்மார்க்கில் BA.2 ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்த ஆய்வின் மூலம் ஓமிக்ரான் BA.2, BA.1-ஐ விட அதிகமாக பரவக்கூடியது என்று நாங்கள் முடிவு செய்கிறோம்.
மேலும் இது நோயெதிர்ப்பு-தவிர்க்கும் பண்புகளைக் கொண்டுள்ளது, இது தொற்றுக்கு எதிரான தடுப்பூசியின் பாதுகாப்பு விளைவை மேலும் குறைக்கிறது என்று ஆய்வின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆய்வாளர்கள் கூறுகையில், ஒமைக்ரான் வைரஸ் உருவாக்கியுள்ள நோய் எதிர்ப்பு சக்தி புதிய மாறுபாடு ஏற்படுத்தப்போகும் பாதிப்பை தடுக்க முடியாது என தெரிய வந்துள்ளது.
பி.ஏ.2. மாறுபாடு ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் 39 சதவீதம் அதிகம் நோய் பரப்பும் தன்மையை கொண்டிருப்பர்.
தடுப்பூசி செலுத்தியவர்களை விட தடுப்பூசி செலுத்தாதவர்களை தான் இந்த புதிய மாறுபாடு அதிகம் பாதிக்கும். பூஸ்டர் தடுப்பூசிகளை நாம் தொடர்ந்து செலுத்துவது மட்டுமே பயன் தரும்.
இருப்பினும் தற்போது கிடைத்துள்ள தரவுகளை வைத்து நாம் முடிவுக்கு வந்துவிட முடியாது என்று தெரிவித்துள்ளனர்.