January 25, 2025, 2:53 AM
24.9 C
Chennai

திருவட்டாறு கோயில் கிழக்கு வாசலில் ஆபத்தான கல்மண்டபம்!

–எம். எஸ். அபிஷேக்-

திருவட்டார் கோவில் கிழக்கு வாசலில் ஆபத்தான கல்மண்டபம் உள்ளதை பராமரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் கிழக்கு வாசல் அருகில் ஆபத்தான நிலையில் இருக்கும் கல்மண்டபத்தை பராமரிக்க வேண்டும் என அறநிலையத் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 108 வைணவத்திருப்பதிகளில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6.ந்தேதி கும்பாபிஷேகம் நடந்ததை அடுத்து நாள் தோறும் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது.

திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் கிழக்கு நடையில் இருந்து ஆற்றுக்குச்செல்லும் பாதையில் கல்மண்டபம் உள்ளது. இந்த கல்மண்டபம் வழியாக பூஜாரிகள், பக்தர்கள் ஆற்றுக்கு இறங்கி நீராடி விட்டு கோவிலுக்கு வருவது வழக்கம். இந்த கல்மண்டபம் பராமரிப்பின்றி புதர்மண்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது. கல்மண்டப சுவர்கள் ஒரு பகுதியில் முழுமையாக இடிந்து காணப்படுகிறது. இதனால் இந்த கல்மண்டபம் வழியாக ஆற்றுக்குக்கு குளிக்கசென்று வரும் அர்ச்சகர்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர்.

பராமரிக்காமல் அப்படியே விட்டு விட்டால் மண்ட்பம் முழுமையாக இடிந்து விழுந்து ஆற்றுக்குச்செல்ல முடியாத நிலை ஏற்படும். புராதன நகரான திருவட்டாரில் ஆபத்தான நிலையில் உள்ள இந்த கல்மண்டபத்தை பழமை மாறாமல் பராமரித்து சீரமைக்க வேண்டும் என திருவட்டார் அன்ன பூர்ணா சேவா டிரஸ்ட் தலைவர் டாக்டர் சந்திரமோகன் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சருக்கு கோரிகை மனு அளித்துள்ளார்.

ALSO READ:  திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா சிறப்பு ரயில்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.

சிவபதம் – ‘சிதம்பரம் நடராஜ கீர்த்தனைகள்’ நூல் வெளியீடு!

ஆக, ஆக… இப்பணி, தில்லையம்பலத்தான் திருவடிக்கு, இந்த ஸ்ரீராமானுஜ தாஸன் செய்த சிறுதொண்டு!