ஆனந்தத்தின் மூலகாரணம் உணர்ந்தால் உய்யலாம்: ஆச்சார்யாள் அருளமுதம்!

abinav vidhya theerthar - 2026

ஒருவன் தன் நண்பனிடம் எனக்கு இனிப்பு பண்டங்கள் உண்பதில் பிரியம் என்று சொன்னான். அதனால் யார் கொடுத்தாலும் அவற்றை வாங்கிக் கொள்ள நான் தயங்குவதில்லை என்றும் கூறினான். தினமும் ஏதாவது ஒரு இனிப்பை சாப்பிட வேண்டும் என்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன் என்று பெருமையுடன் கூறினான்.

சில நாட்கள் சென்றன அவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டு படுத்த படுக்கையானார் அவனை பரிசோதித்த மருத்துவர் அவனுக்கு சர்க்கரை வியாதி என்றும் தொற்றுநோயால் காய்ச்சல் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதைப்பற்றி எல்லாம் கேள்விப்படாத அவனுடைய நண்பன் இனிப்பு பொட்டலத்துடன் அவன் வீட்டிற்கு வந்து உனக்காக இந்த இனிப்புக்களை வாங்கி வந்திருக்கிறேன் என்று அவனிடம் கொடுத்தான் இதைக் கேட்டு திடுக்கிட்ட அந்த நோயாளி ஐயோ இனிப்பா வேண்டவே வேண்டாம் அந்த பொட்டலத்தை இங்கிருந்து அப்புறப்படுத்து இனிப்பு பண்டங்களின் மீது ஆசை போய்விட்டது இனிமேல் அது எனக்கு விஷத்தைப் போன்றது என்று கூறினான்.

சந்தோஷத்தை கொடுத்த பொருள் மற்றொரு சமயத்தில் துக்கத்தை கொடுப்பதாக உள்ளதை இந்த கதையின் மூலம் அறியலாம். சந்தோஷத்தைக் கொடுக்கும் இனிப்பு என்றால் இயற்கையாகவே எப்பொழுதும் அவ்வாறே இருக்க வேண்டும் எப்போதுமே வெறுக்கக்கூடாது.

ஆனால் அவ்வாறு இன்றி சுகத்தின் விருப்பும் வெறுப்பும் மாறி இருப்பது அடிப்படையில் ஒருவனுடைய ஆசையின் விளைவு. ஒரு நோய் ஒருவனுடைய அடிப்படையை பலவீனப்படுத்துவது இல்லை உண்மையில் ஆராய்ந்து பார்த்தால் சுகம் கொடுப்பதாக நாம் நினைக்கும் எந்த பொருளும் ஆனந்தத்தைக் கொடுக்கும் தன்மை உடையது அல்ல. இப்படி பகுத்துப் பார்க்கும் பொழுது வைராக்கியம் ஏற்படுகிறது.

தந்தை தன் குழந்தையை கொஞ்சினார் முத்தமிடும்போது சொரசொரப்பான அவருடைய மீசையும் தாடியும் குழந்தையின் மிருதுவான முகத்தை முட்கள் போல் குத்தின. வலியால் குழந்தை அழத்தொடங்கியது. அதை சமாதானப்படுத்துவது கொண்டு அவர் மீண்டும் முத்தமிட்டு கொண்டே இருந்தார் அது மேலும் அதிகமாக கத்தியது.

ஆத்மாவின் பொருட்டே எல்லா பொருட்களும் ஒருவனுக்கு பிரியமானவை ஆக இருக்கின்றன பிரகதாரண்யக உபநிஷத் நமக்கு இதனை சொல்லிக் கொடுக்கிறது ஒருவன் மனைவியை நேசிக்கிறான் அவளுடைய சுகத்திற்காக மட்டுமல்ல அவள் தன்னுடைய மனைவி என்று நினைக்கிற காரணத்தினாலும் தன்னுடைய சந்தோஷத்தை அவளுடைய சந்தோஷத்தோடு சம்பந்தப்படுத்திக் கொள்வதாலும் தான் அவ்வாறு முடியும்.

எதுவரையில் ஒரு பொருள் ஒருவனுக்கு இன்பத்தை அளிக்குமோ அது வரையில் தான் அவனுக்கு அப்பொருளின் மீது விருப்பம் இருக்கும் அதே போல் துன்பம் தரும் வரையில் தான் பொருள் வெறுக்கப்படுகிறது ஒரே பொருள் எல்லா சமயங்களிலும் விரும்பபடுவதுமில்லை வெறுக்கப்படுவதும் இல்லை. சில நேரங்களில் நமக்கு முன்பு பிடிக்காமல் இருந்தது அது பிறகு பிடிக்க ஆரம்பித்துவிடும்.

எதன் மீது ஆசை வைத்தோமோ பிறகு பிடிக்காமல் போய்விடும். ஆனால் ஆத்மாவின் மேலிருக்கும் விருப்பமானது என்றுமே குறைவதில்லை. தான் எப்போதுமே மிகவும் நேசிக்கப்பட கூடியதாக இருக்கிறது என்று சதஸ்லோகி என்னும் கிரந்தத்தில் ஆதிசங்கரர் புலன் இன்பங்களில் உண்மைத்தன்மையை அற்புதமாக எடுத்துக் கூறியுள்ளார்.

ஆனந்தத்தில் மூலகாரணம் ஆத்மாவாக இருப்பதினால் தான் அது எல்லோருக்கும் பிரியமானதாக இருக்கிறது உண்மையில் கலப்படமற்ற ஆனந்தமே ஆத்மாவின் இயற்கை தன்மை என்று உபநிஷத்துக்கள் அறுதியிட்டு உறுதியாகக் கூறுகின்றன.

இயற்கையாகவே விளங்கும் ஆத்மாவின் அந்தத் தூய்மையான ஆனந்தத்தை உணர முடியாததால் தான் ஒருவன் இந்திரிய சுகங்களில் அத்தகைய ஆனந்தம் உள்ளது என்று தவறுதலாக நினைத்து கொண்டு அவற்றை நாடிச் செல்கிறான்.

இந்திரிய விஷயங்களில் இருந்து பெறப்படுவதாக தோன்றும் சுகத்தின் அடிப்படையில் ஆனந்தமே ஆகும் ஆகையால் ஆனந்தத்திற்கு வாஸ்தவத்தில் இருப்பது ஒரு உற்பத்தி ஸ்தானம் தான் அதுவே ஆத்மா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

Entertainment News

Popular Categories