சிவராத்திரி ஸ்பெஷல்: சிவானந்தப் பத்து!

sivan - 2026

சிவானந்தப் பத்து

திருவொற்றியூரும் திருத்தில்லையும்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

இச்சை உண்டெனக் குன்திரு மலர்த்தாள்
எய்தும் வண்ணம்இங் கென்செய வல்லேன்
கொச்சை நெஞ்சம்என் குறிப்பில்நில் லாது
குதிப்பில் நின்றது மதிப்பின்இவ் வுலகில்
பிச்சை உண்டெனிற் பிச்சரிற் சீறும்
பேய ருண்மனை நாயென உழைத்தேன்
செச்சை மேனிஎம் திருவொற்றி அரசே
தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

ஐய நின்னுடை அன்பர்கள் எல்லாம்
அழிவில் இன்பமுற் றருகிருக் கின்றார்
வெய்ய நெஞ்சகப் பாவியேன் கொடிய
வீண னேன்இங்கு வீழ்கதிக் கிடமாய்
வைய வாழ்க்கையின் மயங்குகின் றனன்மேல்
வருவ தோர்ந்திலன் வாழ்வடை வேனோ
செய்ய வண்ணனே ஒற்றியம் பொருளே
தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

மடிகொள் நெஞ்சினால் வள்ளல்உன் மலர்த்தாள்
மறந்து வஞ்சக வாழ்க்கையை மதித்தேன்
துடிகொள் நேர்இடை மடவியர்க் குருகிச்
சுழல்கின் றேன்அருள் சுகம்பெறு வேனோ
வடிகொள் வேல்கரத் தண்ணலை ஈன்ற
வள்ள லேஎன வாழ்த்துகின் றவர்தம்
செடிகள் நீக்கிய ஒற்றியம் பரனே
தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

இருக்க வாவுற உலகெலாம் உய்ய
எடுத்த சேவடிக் கெள்ளள வேனும்
உருக்கம் ஒன்றிலேன் ஒதியினில் பெரியேன்
ஒண்மை எய்துதல் வெண்மைமற் றன்றே
தருக்க நின்றஎன் தன்மையை நினைக்கில்
தமிய னேனுக்கே தலைநடுக் குறுங்காண்
திருக்கண் மூன்றுடை ஒற்றிஎம் பொருளே
தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

எண்பெ றாவினைக் கேதுசெய் உடலை
எடுத்த நாள்முதல் இந்தநாள் வரைக்கும்
நண்பு றாப்பவம் இயற்றினன் அல்லால்
நன்மை என்பதோர் நாளினும் அறியேன்
வண்பெ றாவெனக் குன்திரு அருளாம்
வாழ்வு நேர்ந்திடும் வகைஎந்த வகையோ
திண்பெ றாநிற்க அருள்ஒற்றி அமுதே
தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

பேதை நெஞ்சினேன் செய்பிழை எல்லாம்
பேசி னால்பெரும் பிணக்கினுக் கிடமாம்
தாதை நீஅவை எண்ணலை எளியேன்
தனக்கு நின்திருத் தண்அளி புரிவாய்
கோதை நீக்கிய முனிவர்கள் காணக்
கூத்து கந்தருள் குணப்பெருங் குன்றே
தீதை நீக்கிய ஒற்றிஎம் பெருமான்
தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

வஞ்ச நெஞ்சர்தம் சேர்க்கையைத் துறந்து
வள்ளல் உன்திரு மலரடி ஏத்தி
விஞ்சு நெஞ்சர்தம் அடித்துணைக் கேவல்
விரும்பி நிற்கும்அப் பெரும்பயன் பெறவே
தஞ்சம் என்றருள் நின்திருக் கோயில்
சார்ந்து நின்றனன் தருதல்மற் றின்றோ
செஞ்சொல் ஓங்கிய ஒற்றிஎம் பெருமான்
தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

புல்ல னேன்புவி நடையிடை அலையும்
புலைய நெஞ்சினால் பொருந்திடும் கொடிய
அல்லல் என்பதற் கெல்லைஒன் றறியேன்
அருந்து கின்றனன் விருந்தினன் ஆகி
ஒல்லை உன்திருக் கோயில்முன் அடுத்தேன்
உத்த மாஉன்தன் உள்ளம்இங் கறியேன்
செல்லல் நீக்கிய ஒற்றியம் பொருளே
தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

எளிய னேன்பிழை இயற்றிய எல்லாம்
எண்ணி னுட்படா வேனும்மற் றவையை
அளிய நல்லருள் ஈந்திடும் பொருட்டால்
ஆய்தல் நன்றல ஆதலின் ஈண்டே
களிய நெஞ்சமாம் கருங்கலைக் கரைத்துக்
கருணை ஈகுதல் கடன்உனக் கையா
தெளிய ஓங்கிய ஒற்றிஎன் அமுதே
தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

வெறிபி டிக்கினும் மகன்தனைப் பெற்றோர்
விடுத்தி டார்அந்த வெறியது தீரும்
நெறிபி டித்துநின் றாய்வரென் அரசே
நீயும் அப்படி நீசனேன் தனக்குப்
பொறிபி டித்தநல் போதகம் அருளிப்
புன்மை யாவையும் போக்கிடல் வேண்டும்
செறிபி டித்தவான் பொழில்ஒற்றி அமுதே
தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories