April 27, 2025, 9:37 PM
30.6 C
Chennai

கொரோனா: சென்னையிலிருந்து சிவகங்கை வரும் மக்கள்!

தமிழகத்தில் கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக கொரோனா தொற்று இல்லாத ஒரே மாவட்டமாக நீடிக்கிறது சிவகங்கை. இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் யாருக்கும் தெரியாமல் ஊடுருவி வருவதால் மாவட்டத்தில் மீண்டும் கரோனா தொற்று பரவிவிடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

சிவகங்கை மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில், கடந்த வாரம் வரை சிகிச்சையிலிருந்த அத்தனை பேரும் படிப்படியாக வீடு திரும்பினர். கடைசியாக சிகிச்சையிலிருந்த ஒரே ஒரு நபரும் கடந்த வாரம் வீடு திரும்பியதால் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டது சிவகங்கை.

இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் அங்குள்ள பலரும் தங்களது பாதுகாப்பு கருதி சொந்த மாவட்டங்களுக்குப் படையெடுத்து வருகிறார்கள்.

இப்படி வருபவர்களில் பெரும்பாலானவர்கள் சிகிச்சை மற்றும் திருமணம் உள்ளிட்ட காரணங்களைச் சொல்லி பொய்யாக இ- பாஸ் பெற்று பயணிப்பதாகச் சொல்லப் படுகிறது. காவல்துறை உள்ளிட்ட பணியில் இருப்பவர்கள் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தியும் சொந்தபந்தங்களை மாவட்டம் விட்டு மாவட்டம் அனுப்பி வைப்பதாகச் சொல்லப்படுகிறது.

அப்படி கடந்த ஒரு வாரத்தில் சென்னைவாசிகள் சிலர் சிவகங்கை மாவட்டத்திலுள்ள கண்ட்ரமாணிக்கம், காரைக்குடி உள்ளிட்ட ஊர்களுக்கு வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இப்படி வந்தவர்கள் அது பற்றிய விவரங்களை பொதுசுகாதாரத் துறைக்கு தெரிவித்து தங்களை கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது அரசின் உத்தரவு.

ALSO READ:  திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான்!

ஆனால், சிவகங்கை மாவட்டத்துக்குள் அப்படி வந்தவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை அரசுக்குத் தெரிவித்ததாகவும் தெரியவில்லை. அப்படித் தெரிவித்தால் தங்களை தனிமைப்படுத்திவிடக் கூடும் என்பதால் தங்களின் வருகையை அரசுக்குச் சொல்லாமல் மக்களோடு மக்களாக அவர்கள் நடமாடிக் கொண்டிருப்பதாக ஆங்காங்கே தகவல்கள் கசிவதால் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவிவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் மக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒட்டுமொத்த நாடே வலியை உணர்கிறது; மக்களின் ரத்தம் கொதிக்கிறது!

படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒட்டுமொத்த நாடே வலியை உணர்கிறது; மக்களின் ரத்தம் கொதிக்கிறது!

படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பந்துகளை பஞ்சாய் பறக்கவிட்ட பஞ்சாப் அணிம!

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ஐ.பி.எல் 2025 – பஞ்சாப் vs கொல்கொத்தா –...

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories