இந்திய தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று ஜோஹென்னஸ்பர்க்கில் துவங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. இதை அடுத்து களத்தில் இறங்கிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 203 ரன்களை எடுத்தது.
பவர் பிளேயான முதல் 6 ஓவரில் 2 விக்கெட் இழந்து 78 ரன்கள் குவித்தது இந்திய அணி. முதல் 50 ரன்கள் 27 பந்திலும், அடுத்த 50 ரன் 23 பந்திலும் எடுக்கப் பட்டது. தவான் 27 பந்தில் 50 ரன் அடித்தார். இந்தியா 85 பந்துகளில் 150 ரன்னும், 118 பந்துகளில் 200 ரன்னையும் கடந்தது.
இதை அடுத்து தென்னாப்பிரிக்க அணி விளையாடி வருகிறது.