புதுக்கோட்டை
புதுக்கோட்டை அருகே பாண்டிபத்திரம் கிராமத்தில் 3ந்தேதி முத்துமாரியம்மன்கோயிலில் தீமிதித்தல் வழிபாடு நடந்தது
புதுக்கோட்டை அருகே ஆவுடையார்கோயிலை அடுத்த பாண்டிபத்திரத்தில் பழமையான முத்துமாரியம்மன்கோயில் உள்ளது.இக்கோயிலில் ஆண்டுதோறும் 11 நாட்கள் திருவிழா நடைபெறும் அதன்படி கடந்த வாரம் பூச்சொரிதல் காப்புகட்டுதலுடன் விழா தொடங்கி 3ந்தேதி மாலை 6 மணிக்கு விரதம் இருந்த பக்தர்கள் 30க்கும் மேற்பட்டவர்கள் பாண்டிபத்திரம் விநாயகரை தரிசனம் செய்து பின்னர் கோயிலை வலம் வந்து தீ மிதித்து முத்துமாரியம்மனை தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை பாண்டிபத்திரம் கிராமத்தினர் செய்தனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆவுடையார்கோயில் போலீசார் செய்தனர்.
![புதுக்கோட்டை அருகே பாண்டிபத்திரம் முத்துமாரியம்மன் கோயிலில் தீமிதி வழிபாடு! 1 040919 pandipathiram](https://i1.wp.com/dhinasari.com/wp-content/uploads/2019/09/040919-pandipathiram.jpg?fit=696%2C392&ssl=1)