January 21, 2025, 3:02 AM
23.2 C
Chennai

ஆவுடையார்கோயில் ஆத்மநாத சுவாமி கோயிலில் மார்கழி திருவாதிரை தேரோட்டம்!

#image_title

ஆவுடையார்கோயில்: ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயிலில் மார்கழி திருவாதிரை தேரோட்டம் நடந்தது.

ஆவுடையார்கோயிலில் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆத்மநாதசுவாமி கோயில் உள்ளது இக்கோயில் பாண்டிய மன்னரிடம் முதலமைச்சராக இருந்த மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட திருவாசகம் பிறந்த கோயிலாகும். இக்கோயிலில் திருவாவடுதுறை 24வது குருமகாசன்னிதானம் அம்பலவாண தேசிகபரமாச்சாரிய சுவாமிகள் அருளாணைப்படி மார்கழி திருவிழா நடந்து வருகிறது.

9ம் நாள் விழாவை முன்னிட்டு அதிகாலையில் மாணிக்கவாசகர் தேரில் எழுந்தருளிய நிலையில் அதனை தொடர்ந்து தேருக்கு உரியபூஜைகள் செய்து திருவாவடுதுறை ஆதீன கட்டளை வேலப்பதம்பிரான் சுவாமிகள் ஈரோடு தேர்திருப்பணிகுழு,நெற்குப்பம் ஏகாம்பரம் சேர்வை, தாரணி வீரப்பன் சேர்வை குடும்பத்தினர்கள் மண்டகப்படிதாரர்கள் வடம் தொட தேரோட்டம் நடந்தது.

விழாவில் முன்னாள் எம்எல்ஏ ரத்தினசபாபதி, ராஜநாயகம், முன்னாள் சேர்மன் நரேந்திரஜோதி,கவுன்சிலர் செந்தில்குமரன், ஊராட்சி தலைவர் சந்திரா தேர் திருப்பணிக் குழு செயலாளர் மணிவாசகம் பொருளாளர் மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை தென்மண்டலமேலாளர் ராமச்சந்திரன் மேற்பார்வையாளர் முத்துகிருஷ்ணன் கண்காணிப்பாளர் சுப்ரமணியன்,மணியம் ராமன் ஆகியோர் செய்தனர்.

ALSO READ:  சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

பாதுகாப்பு ஏற்பாடுகளை அறந்தாங்கி டிஎஸ்பி சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் செய்தனர்.விழாவைமுன்னிட்டு நகரில் பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

அபிஷேக அர்ச்சனைகளை ஆத்மநாதருக்கு நம்பியார்களும் மாணிக்கவாசகருக்கு சிவாச்சாரியார்களும் செய்தனர். ஒதுவார் குழுவினர் பக்கவாத்தியத்துடன் திருவெம்பாவை பாராயணம் செய்தனர். சிவனடியார்களும் சிவன் பாடல் பாடினர்.விழாவை முன்னிட்டு நகரின் பல இடங்களில் அன்னதானம் நடந்தது.

சிவனடியார்கள் சிவன் வேடம் அணிந்து நடனமாடினர் சிவ தொண்டர்கள் தேரின் பின்பக்கம் திருவாசகம் திருமுறை படித்த வண்ணம் வழிபாடு செய்தனர்.

மார்கழி திருவாதிரை திருவிழா ஆவுடையார்கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்றது என்பதால் தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து சிவ பக்தர்கள் ஆத்மநாதர் யோகாம்பிகா குதிரைச்சாமி உள்ளிட்ட தெய்வங்களை வழிபட்டு தேரில் காட்சி கொடுத்த மாணிக்கவாசகரையும் வழிபட்டனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.21- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்!

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பிரணவ மந்திர பொருளை உபதேசம் செய்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த முருகன் மந்திரத்தை கேட்டுவிட்டார்.

சபரிமலையில்… காணிக்கை நாணயங்களை எண்ண, கைகொடுத்த ஏற்பாடுகள்!

சபரிமலை மண்டல மகரவிளக்கு மஹோத்சவத்திற்கு முந்தைய நாள், நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட அனைத்தும் எண்ணப்பட்டு இன்று கருவூலம் பூட்டப்பட்டது.

சபரிமலை கோயில் நடை அடைப்பு!

இனி சபரிமலை ஐயப்பன் கோவில் மாசி மாத பூஜைக்காக நடை திறக்கப்படும் சபரிமலையில் இந்த ஆண்டு மகரஜோதி மகர விளக்கு

பஞ்சாங்கம் ஜன.20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...