செங்கோட்டை முப்புடாதி அம்மன் கோவிலில் மார்கழி திருப்பாவை பஜனை ஊர்வலம்!

Published:

sengottai muppudathi amman temple margazhi bajanai - 2026
#image_title

செங்கோட்டை முப்புடாதி அம்மன் கோவிலில் மார்கழி திருப்பாவை பஜனை ஊர்வலம்.

செங்கோட்டை ஆரியநல்லுார் தெருவில் யாதவர் (கரையாளா்) சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீமுப்புடாதி அம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் யாதவ சமுதாய சார்பில் மார்கழி மாத திருப்பாவை நோன்பு மற்றும் பஜனை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவது வழக்கம்

இந்தாண்டு திருப்பாவை நோன்பு பஜனை நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 17ஆம் தேதி துவங்கப்பட்டு நாள்தோறும் காலை திருப்பாவை பாராயணம் பஜனை ஊர்வலம் நடந்தது.

பஜனை ஊர்வலத்தில் பாளை வேதநாராயணன் பஜனை மண்டல குழு மற்றும் பக்தர்கள் சிறுவர் சிறுமியர் கோலாட்டத்துடன் கோவில் முன்பிலிருந்து துவங்கி  நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை வந்தடைந்தது.

விழாவில் முப்புடாதி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. .

நிகழ்ச்சியில் பஜனக்குழு தலைவா் மருதப்பன்கரையாளா், நிர்வாகிகள் பால்ராஜ், கல்யாணி,முருகேசன், மாரியப்பன், ஹரிஹரன் உள்பட பலா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை சமுதாய பெரியோர்கள், நிர்வாகிகள்  விழாக்கமிட்டியினா் சிறப்பாக செய்திருந்தனா். 

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

Related articles

Recent articles

spot_img