January 19, 2025, 7:28 AM
23.5 C
Chennai

சீன ஆதரவு பிரசார தளத்தின் ஹெச்.ஆர். தலைவர் அப்ரூவர் ஆகிறார்!

சீனாவுக்கு ஆதரவாகவும், நம் நாட்டுக்கு எதிராகவும் பணம் பெற்றுக்கொண்டு செய்திகளை வலியத் திணித்து பிரசார நோக்கில் செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வழக்கில், ‘நியூஸ் கிளிக்’ இணைய செய்தி நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை தலைவர் ‘அப்ரூவர்’ ஆக மாறத் தயாராக உள்ளதாக மனு கொடுத்திருக்கிறார்.

புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், ‘நியூஸ் கிளிக்’ இணைய செய்தி நிறுவனம், நம் அண்டை நாடான சீனாவுக்கு ஆதரவாக தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தது. சீன ஆதரவு மட்டுமல்லாது, நம் நாட்டுக்கு எதிராகவும் செய்திகள் வலியக் கட்டமைத்து வெளியிடப் பட்டன. இந்தச் செயல்களின் பின்னணியில், இதற்காக வெளிநாட்டில் இருந்து பெருந்தொகை பெறப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக புது தில்லி போலீசின் சிறப்புப் பிரிவு விசாரித்து வந்தது. இதன் பின் கடந்த அக்.3ல் இந்த நிறுவனத்தின் அலுவலகங்கள் உட்பட, 88 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனையில், 300க்கும் மேற்பட்ட மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அந்த நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதுவரை, 46 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ALSO READ:  மீண்டும் சிறப்பு அந்தஸ்து கோரி தீர்மானம் நிறைவேற்றிய காஷ்மீர் சட்டசபை!

இந்த வழக்கில், நியூஸ் கிளிக் நிறுவனத்தின் நிறுவனரும், முதன்மை ஆசிரியருமான பிரபிர் புர்கயஸ்தா, மனிதவள மேம்பாட்டுத் துறை தலைவர் அமித் சக்கரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது கடுமையான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் அப்ரூவர் ஆகத் தயாராக உள்ளதாகக் கூறி, அதற்கு அனுமதி கேட்டு அமித் சக்கரவர்த்தி, புது தில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதை அடுத்து, அவரது தரப்பிலான வாதத்தை, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பதிவு செய்யுமாறு, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.