ஆவுடையார்கோயில் ஆத்மநாத சுவாமி கோயிலில் மார்கழி திருவாதிரை தேரோட்டம்!

avudaiyarkoil nataraja therottam - 2026
#image_title

ஆவுடையார்கோயில்: ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயிலில் மார்கழி திருவாதிரை தேரோட்டம் நடந்தது.

ஆவுடையார்கோயிலில் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆத்மநாதசுவாமி கோயில் உள்ளது இக்கோயில் பாண்டிய மன்னரிடம் முதலமைச்சராக இருந்த மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட திருவாசகம் பிறந்த கோயிலாகும். இக்கோயிலில் திருவாவடுதுறை 24வது குருமகாசன்னிதானம் அம்பலவாண தேசிகபரமாச்சாரிய சுவாமிகள் அருளாணைப்படி மார்கழி திருவிழா நடந்து வருகிறது.

9ம் நாள் விழாவை முன்னிட்டு அதிகாலையில் மாணிக்கவாசகர் தேரில் எழுந்தருளிய நிலையில் அதனை தொடர்ந்து தேருக்கு உரியபூஜைகள் செய்து திருவாவடுதுறை ஆதீன கட்டளை வேலப்பதம்பிரான் சுவாமிகள் ஈரோடு தேர்திருப்பணிகுழு,நெற்குப்பம் ஏகாம்பரம் சேர்வை, தாரணி வீரப்பன் சேர்வை குடும்பத்தினர்கள் மண்டகப்படிதாரர்கள் வடம் தொட தேரோட்டம் நடந்தது.

விழாவில் முன்னாள் எம்எல்ஏ ரத்தினசபாபதி, ராஜநாயகம், முன்னாள் சேர்மன் நரேந்திரஜோதி,கவுன்சிலர் செந்தில்குமரன், ஊராட்சி தலைவர் சந்திரா தேர் திருப்பணிக் குழு செயலாளர் மணிவாசகம் பொருளாளர் மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை தென்மண்டலமேலாளர் ராமச்சந்திரன் மேற்பார்வையாளர் முத்துகிருஷ்ணன் கண்காணிப்பாளர் சுப்ரமணியன்,மணியம் ராமன் ஆகியோர் செய்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை அறந்தாங்கி டிஎஸ்பி சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் செய்தனர்.விழாவைமுன்னிட்டு நகரில் பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

அபிஷேக அர்ச்சனைகளை ஆத்மநாதருக்கு நம்பியார்களும் மாணிக்கவாசகருக்கு சிவாச்சாரியார்களும் செய்தனர். ஒதுவார் குழுவினர் பக்கவாத்தியத்துடன் திருவெம்பாவை பாராயணம் செய்தனர். சிவனடியார்களும் சிவன் பாடல் பாடினர்.விழாவை முன்னிட்டு நகரின் பல இடங்களில் அன்னதானம் நடந்தது.

சிவனடியார்கள் சிவன் வேடம் அணிந்து நடனமாடினர் சிவ தொண்டர்கள் தேரின் பின்பக்கம் திருவாசகம் திருமுறை படித்த வண்ணம் வழிபாடு செய்தனர்.

மார்கழி திருவாதிரை திருவிழா ஆவுடையார்கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்றது என்பதால் தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து சிவ பக்தர்கள் ஆத்மநாதர் யோகாம்பிகா குதிரைச்சாமி உள்ளிட்ட தெய்வங்களை வழிபட்டு தேரில் காட்சி கொடுத்த மாணிக்கவாசகரையும் வழிபட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories