சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியில் வசித்து வரும் மோகன்ராஜ். இவர் ஆட்டோ டிரைவர். ஒரு கட்சியில் இவர் ஆட்டோ தொழிற்சங்க தலைவராகவும் இருக்கிறாராம்.
ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். ஆனால் மோகன்ராஜ் தந்த பாலியல் வக்கிரம் தாங்காமல் அந்த பெண் ஓடி போய்விட்டார். அடுத்ததாக 2-வது கல்யாணம் செய்தார் மோகன்ராஜ்.
அந்த பெண்ணும் இவர் செய்த பாலியல் தொல்லை தாங்காமல் பிரிந்து சென்றுவிட்டார். அதற்கு பிறகு மோகன்ராஜ் கல்யாணம் செய்யவில்லை. பதிலாக, பெண்களை மிரட்டி பாலியல் வக்கிரங்களை அரங்கேற்ற தொடங்கினார்.
பெண்களை ஏமாற்றி, நாசம் செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளார். இதை பற்றி 3 நாள் முன்பு ஒரு பெண், மாவட்ட எஸ்பி ஆபிசில் புகார் தரவும்தான் விசாரணை ஆரம்பமானது. பல அதிர்ச்சி தகவல்களும் வெளியாக தொடங்கியது.
காகாபாளையம் பஸ் ஸ்டாப் பக்கம்தான் மோகன்ராஜ் ஆட்டோ ஸ்டேண்ட். அங்கு இரவு நேரங்களில் தனியாக வரும் பெண்களிடம் சிரித்து பேசி மயக்கி, போன் நம்பரை வாங்கிவைத்து கொள்வாராம். பண கஷ்டத்தில் உள்ள பெண்கள் என்றால் பிறகு, பண உதவி செய்வது போல பேச்சு தந்துகொண்டே, அவர்களை வீட்டுக்கு வரவழைத்து, மிரட்டி உல்லாசமாக இருப்பார். அப்படி இதுவரை 40 க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த ,மோகன்ராஜிடம் ஏமாந்துள்ளனர்.
ஒரு சிலர் இவனுக்கு பயந்து ஊரை காலி செய்து கொண்டே போய்விட்டனர். ஒரு பெண்ணை காணவில்லையாம். வலையில் விழும் பெண்களிடம் மோகன்ராஜ் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து கொள்வானாம். இப்போதைக்கு போலீசார் இவனது 7 ஆபாச வீடியோவை பறிமுதல் செய்துள்ளனர். அதில் ஒரு வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.
அதில் அந்த பெண்ணை மிரட்டி பணிய வைக்கும் காட்சி மட்டும் வெளியாகி உள்ளது. பெண்ணை மிரட்டியும், ஆவேசமாக பேசியும் உல்லாசம் அனுபவிப்பதும் கண்கூடாக தெரிகிறது. மோகன்ராஜ் பற்றி முழுசா விஷயம் தெரியாத ஒரு நடுத்தர வயது பெண்தான் இவர். எப்படியோ பேசி தன் வீட்டுக்கு வரவழைத்து விட்டார் மோகன் ராஜ்!
பெரிய வசதி கொண்ட அறை ஒன்றுமில்லை அது. தயங்கி நிற்கும் பெண்ணோ, முதலில் குழப்பமாகவும், பிறகு பயந்தும் நடுங்கி மோகன்ராஜை பார்க்கிறார். அப்போது மோகன்ராஜ் “முதல்ல உட்காரு..” என்கிறார். “என்ன விஷயம் சொல்லு… ஏன் வர சொன்னே” என்று அந்த பெண் கேட்கிறார்.
உடனே மோகன்ராஜ் கதவை சாத்தி தாழ்ப்பாள் போடுகிறார். அந்த பெண், “ஏன் கதவை சாத்துறே.. என்ன விஷயம்” என்று கேட்க லேசான பயம் அவரது குரலில் தெரிகிறது .
உடனே மோகன்ராஜ் தன் சட்டையை கழற்றிவிட்டு, லுங்கியுடன் அந்த பெண் அருகே செல்கிறார். படுக்கையில் பெண்ணை பலவந்தமாக பிடித்து தள்ளுகிறார். இதை அந்த பெண் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
உல்லாசத்துக்கு வரவில்லை என்றால், அவ்வளவுதான் என்று மிரட்டுகிறார். தொடர்ந்து அந்த பெண் பிடி கொடுக்க மறுக்கவும், அடிக்க கை ஓங்குகிறார்.. அங்கிருந்து தப்பி செல்ல முடியாதபடி, கட்டிலில் விழுந்து கிடந்த அந்த பெண்ணின் மீது மோகன்ராஜ் அப்படியே மேலே விழுகிறார்” இப்படி அந்த வீடியோ காட்சி உள்ளது.
சில சமயம் பெண்களை நண்பர்களுக்கு விருந்தாக்கவும் செய்வாராம் இந்த மோகன்ராஜ். இப்படி மோகன்ராஜ் பலவந்தப்படுத்தி பெண்களை சீரழிக்கும்போது, அதை அவரது நண்பர் வீடியோ எடுப்பாராம். அவரை இப்போது காணவில்லை. அவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
இப்போதைக்கு இந்த காம கொடூரன் மோகன்ராஜ், கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இனிமேல் நடக்க போகும் விசாரணையில்தான் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.